நடப்பு சாம்பியனான சென்னை அணி 2022 ஐபிஎல் தொடரில் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு விளையாடவில்லை, சென்னை அணி தான் எதிர்கொண்டு முதல் 5 போட்டியில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
இந்தத் தொடர் தோல்வியின் எதிரொலியால் சென்னை அணி அடுத்தடுத்து வரும் போட்டிகளில் எந்த ஒரு தவறும் செய்யாமல் வெற்றி பெற வேண்டும் என்ற கட்டாயத்தில் தள்ளப்பட்டுள்ளது.
இதற்கு முக்கிய காரணமாக சென்னை அணியில் போதுமான வீரர்கள் இடம் பெறவில்லை என்பதே அனைவரின் கருத்தாக உள்ளது.
இந்த நிலையில் இந்த மூன்று வீரர்கள் சென்னை அணியில் இல்லாமல் போனது சென்னை அணிக்கு மிகப்பெரும் பலவீனமாக அமைந்துவிட்டது என்று கிரிக்கெட் வல்லுனர்கள் கருதுகின்றனர்.
அப்படிப்பட்ட 3 வீரர்கள் பற்றி இங்கு காண்போம்
தீபக் சஹர்
2022 ஐபிஎல் தொடரில் சென்னை அணி இப்படி பரிதாபமாக விளையாடுகிறது என்றால் அதற்கு முக்கிய காரணம் சென்னை அணியின் பந்துவீச்சு சரியாக இல்லாதது தான்.
ஒருவேளை தீபக் சகர் காயம் காரணமாக அணியிலிருந்து விலகவில்லை என்றால் சென்னை அணியின் நிலைமை நன்றாக இருந்திருக்கும், பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் அதிரடியாக விளையாட கூடிய திறமை படைத்த தீபக் சஹர் சென்னை அணிக்கு விளையாடமல் போனது மிகப்பெரும் துரதிர்ஷ்டம் என்று ரசிகர்கள் உட்பட பெரும்பாலானோர் கருதுகின்றனர்.