சையத் முஸ்தாக் அலி தொடரின் மூலம் ஐபிஎல் தொடரில் இடம்பிடிக்க கால் பதிக்க வாய்ப்புள்ள ஐந்து இளம் வீரர்கள் !! 1
Prev1 of 5
Use your ← → (arrow) keys to browse

உலகின் பிரபல்யமான நடத்தப்படும் கிரிக்கட் தொடர்களில் பிசிசிஐயால் நடத்தப்படும் ஐபிஎல் தொடரும் ஒன்று , ஐபிஎல் தொடரின் உதவியால் பல இளம் வீரர்களுக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது, குறிப்பாக கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்ட தன் மூலம் இந்திய அணிக்கு சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன் போன்ற வீரர்கள் கிடைத்துள்ளனர்.

வருடம் வருடம் நடைபெறும் ஐபிஎல் தொடரில் உள்ளூர் போட்டிகளில் மிக சிறப்பாக செயல்படும் வீரர்களுக்கு விளையாடுவதற்கு வாய்ப்புகள் கிடைக்கும், அதனை அவர்கள் சரியாக பயன்படுத்தும் பட்சத்தில் இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பும் கிடைக்கும்.

அந்த வகையில் நடந்து முடிந்த முஷ்டாக் அலி தொடரில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களுக்கு வருகிற ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அப்படி முஷ்டாக் அலி தொடரில் சிறப்பாக செயல்பட்ட 5 வீரர்களுக்கு வருகிற 2022 ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் ஏதேனும் ஒரு அணிக்கு தேர்வாகும் வாய்ப்பு உள்ளது.

அப்படிப்பட்ட 5 வீரர்களை பற்றி இங்கு காண்போம்.

தர்சன் நல்கண்டே

சையத் முஸ்தாக் அலி தொடரின் மூலம் ஐபிஎல் தொடரில் இடம்பிடிக்க கால் பதிக்க வாய்ப்புள்ள ஐந்து இளம் வீரர்கள் !! 2

மகாராஷ்டிரா அணிக்காக விளையாடிய 23 வயதாகும் தர்ஷன் 2021 முஷ்டாக் அலி டிராபியில் மிக சிறப்பாக செயல்பட்டு 13 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதில் குறிப்பாக கர்நாடகா அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் 4 பந்துகளில் 4 விக்கெட்களை வீழ்த்தி அசத்தியுள்ளார். அதேபோன்று அருணாச்சல் பிரதேஷ் அணிக்கு எதிரான முதல் போட்டியில் 5/9 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.

2021 முஷ்டாக் அலி தொடரில் மிகச் சிறந்த முறையில் பந்துவீசிய தர்ஷனுக்கு வருகிற 2022 ஐபிஎல் தொடரில் ஏதேனும் ஒரு அணியில் விளையாடுவதற்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Prev1 of 5
Use your ← → (arrow) keys to browse

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *