ஐபிஎல் 2022; கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி குறிவைத்துள்ள 3 வீரர்கள் !! 1
Prev1 of 3
Use your ← → (arrow) keys to browse

2022 ஐபிஎல் தொடருக்கான ஏலம் இந்த மாத இறுதியில் நடைபெற இருப்பதால் ஒவ்வொரு அணியும் எந்த வீரரை அணியில் இணைக்கலாம்,எந்த வீரரை தக்கவைத்துக் கொள்ளலாம், எந்த வீரரை அணியிலிருந்து நீக்கலாம் என்று தீவிரமாக திட்டமிட்டு வருகிறது.

அதில் குறிப்பாக 2021 ஐபிஎல் தொடரின் மிக சிறந்த முறையில் விளையாடி இறுதிச்சுற்று வரை முன்னேறிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி எதிர்பாராதவிதமாக இறுதிச்சுற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் தோல்வியைத் தழுவியது, இதன்காரணமாக 2022 ஐபிஎல் தொடரில் எப்படியாவது வெல்ல வேண்டும் என்று திட்டங்களை தீட்டி வருகிறது.

2021 ஐபிஎல் தொடரில் எந்த ஒரு காரணத்திற்காக கோப்பை இழந்தோம் என்ற விஷயத்தை நன்கு மனதில் வைத்துக்கொண்டு 2022 ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் இந்த மூன்று வீரர்களை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தனது அணியில் இணைத்துக் கொள்ள திட்டமிட்டு வருகிறது.

அப்படிப்பட்ட மூன்று வீரர்களைப் பற்றி இங்கு காண்போம்.

ஷர்துல் தாகூர்

ஒரு அணியில் மூன்று வீரர்களை மட்டுமே தக்க வைத்துக் கொள்ள முடியும் என்ற விதி இருப்பதால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஷர்துல் தாகூர் அணியிலிருந்து நீக்கி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் மிக சிறந்த முறையில் விளையாடி சென்னை அணிக்காக பல முறை வெற்றி பெற்று கொடுத்த ஷர்துல் தாகூரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தனது அணியில் இணைத்துக் கொள்வதற்கு அதிகமான வாய்ப்பு உள்ளது, ஏனென்றால் டெத் ஓவர்களிலும் லோயர் ஆர்டற்களிலும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தடுமாறி வருவதால் ஷர்துல் தாகூர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு ஒரு நல்ல தீர்வாக இருப்பார்.

ஐபிஎல் 2022; கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி குறிவைத்துள்ள 3 வீரர்கள் !! 2

Prev1 of 3
Use your ← → (arrow) keys to browse

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *