சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

நடந்து முடிந்த 2021 ஐபிஎல் தொடரில் யாரும் எதிர்பாராத விதமாக தொடரை விட்டு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதல் ஆளாக வெளியேறியது. இதற்கு முக்கிய காரணமாக சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் பேட்ஸ்மேன்கள் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு சிறப்பாக செயல்படவில்லை.
மேலும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் நட்சத்திர துவக்க வீரர்களாக திகழ்ந்த ஜானி பேர்ஸ்டோ மற்றும் டேவிட் வார்னர் ஆகிய இரண்டு வீரர்களையும் 2022 ஐபிஎல் தொடருக்கு ஹைதராபாத் அணி தக்க வைத்துக் கொள்ளாது என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக சென்னை அணியின் நட்சத்திர துவக்க வீரர் ருத்ராஜை சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி தனது அணியில் இணைத்துக் கொள்வதற்கான அனைத்து முயற்சிகளையும் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.