Use your ← → (arrow) keys to browse
மும்பை இந்தியன்ஸ்

ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி வருகிற 2022 ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் ரோஹித் சர்மா மற்றும் பும்ரா ஆகிய இரு வீரர்களை தக்க வைத்துக்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இவர்களைத் தவிர எந்த ஒரு வீரரையும் மும்பை இந்தியன்ஸ் அணி தக்க வைத்துக் கொள்வதற்கு அதிக ஆர்வம் காட்டவில்லை என்றே கிரிக்கெட் வல்லுனர்கள் தெரிவித்து வருகின்றனர்.
குறிப்பாக மும்பை இந்தியன்ஸ் அணியின் துவக்க வீரர்களான இஷன் கிஷன் மற்றும் குயின்டன் டி காக் ஆகிய இரு துவக்க வீரர்களையும் வருகிற 2022 ஐபிஎல்தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி நீக்கிவிடும் என்றே எதிர்பார்க்கபடுகிறது,இதன்காரணமாக நட்சத்திர துவக்க வீரர் ருத்ராஜ் கெய்க்வாட்டை தனது அணியில் சேர்ப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் மும்பை இந்தியன்ஸ் அணி மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Use your ← → (arrow) keys to browse