மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் டாஸ் வென்றுள்ள டெல்லி கேப்பிடல்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
ஐபிஎல் டி.20 தொடரில் நாளுக்கான முதல் போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதுகின்றன.
மும்பை ப்ராபவுர்ன் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.
இந்த போட்டிக்கான டெல்லி கேப்பிடல்ஸ் அணியில், டிம் செய்பர்ட்,மந்தீப் சிங், ரோவ்மன் பவல், லலித் யாதவ், ஷர்துல் தாகூர், கலீல் அஹமத், குல்தீப் யாதவ், கம்லேஷ் நாகர்கோட்டி போன்ற வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
அதே போல் இந்த போட்டிக்கான மும்பை இந்தியன்ஸ் அணியில், சூர்யகுமார் யாதவிற்கு பதிலாக திலக் வர்மா என்னும் வீரருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இது தவிர அன்மோல்ப்ரீட் சிங், டிம் டேவிட், டேனியல் சம்ஸ், முருகன் அஸ்வின், தைமல் மில்ஸ் மற்றும் பாசில் தம்பி போன்ற வீரர்களும் இந்த போட்டிக்கான மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆடும் லெவனில் இடம்பெற்றுள்ளனர்.
இன்றைய போட்டிக்கான மும்பை இந்தியன்ஸ் அணி;
ரோஹித் சர்மா, இஷான் கிஷன், திலக் வர்மா, அன்மோல்பிரீட் சிங், கைரன் பொலார்ட், டிம் டேவிட், டேனியல் சம்ஸ், முருகன் அஸ்வின், தைமல் மில்ஸ், ஜஸ்ப்ரிட் பும்ராஹ், பாசில் தம்பி.
இன்றைய போட்டிக்கான டெல்லி கேப்பிடல்ஸ் அணி;
ப்ரிதீவ் ஷா, டிம் செய்பர்ட், மந்தீப் சிங், ரிஷப் பண்ட், ரோவ்மன் பவல், லலித் யாதவ், அக்ஷர் பட்டேல், ஷர்துல் தாகூர், கலீல் அஹமத், குல்தீப் யாதவ், கம்லேஷ் நாகர்கோட்டி.