ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் பொறுப்பை உதறித்தள்ளியதற்கு காரணத்தை தெரிவித்த விராட் கோலி.
ஐபிஎல் தொடர் ஆரம்பித்தது முதல் ஒரே அணியில் விளையாடும் ஒரு வீரர் யார், என்று கேட்டால் அது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி தான். 2008 ஆம் ஆண்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாட துவங்கிய கோலி 2013 ஆம் ஆண்டு அந்த அணியின் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டார்.

அன்று முதல் 2021 வரை பெங்களூர் அணியின் கேப்டனாக பயணித்த விராட் கோலி, தனது அணிக்கு ஒரு முறை கூட கோப்பையை வென்று கொடுக்க முடியவில்லை என்ற விரக்தியால் 2021 ஐபிஎல் தொடருக்கு பிறகு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டனாக பொறுப்பு ஏற்க மாட்டேன் ஆனால் ஐபிஎல் தொடரில் நான் விளையாடும் வரை பெங்களூர் அணிக்காக தான் விளையாடுவேன் என்று அறிவித்துவிட்டார்.
இதன் காரணமாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 2022 ஐபிஎல் தொடருக்கான பெங்களூரு அணியின் அடுத்த கேப்டனாக சென்னை அணியின் முன்னாள் வீரர் டுப்ளசிஸை தேர்வு செய்துள்ளது, சிலர் விராட் கோலியே மீண்டும் கேப்டனாக பயணிக்க வேண்டியதுதானே,என்று பெங்களூர் அணிக்கும் விராட் கோலிக்கும் அறிவுரை கொடுத்து வருகின்றனர்.

இந்தநிலையில் விராட் கோலி எதனால் கேப்டன் பதவியை உதறித் தள்ளினார் என்பதை தெள்ளத்தெளிவாக செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து விராட் கோலி பேசுகையில்,“ நான் மற்றவர்களைப் போல் என்னால் முடியவில்லை என்பது தெரிந்தும் அதை தொடர மாட்டேன், எந்த ஒரு செயலாக இருந்தாலும் அதை ரசித்து செய்ய வேண்டும், அப்படி அதை ரசிக்க முடியவில்லை என்றால், சிறப்பாக செய்தாலும் அதை செய்வதற்கு என் மனம் ஏற்றுக் கொள்ளாது. நான் எடுத்த முடிவை சிலர் ஆச்சரியமாக பார்க்கின்றனர். ஏன் இப்படி நடந்தது..?என்று கேள்வி எழுப்புகின்றனர் ஆனால் சம்பந்தப்பட்ட எனக்கு தான் அது குறித்து முழுமையாக தெரியும், இதை ஆச்சரியத்துடன் பார்க்க தேவையில்லை. எனக்கு தற்பொழுது ஒரு இடைவேளை தேவைப்படுகிறது, அதேபோன்று வேலைப்பளு குறைப்பதற்காகவே இந்த முடிவை எடுத்துள்ளேன்.நான் முடிவெடுக்க வேண்டுமென்று யோசித்தேன்,முடிவெடுத்தேன் பின் அறிவித்து விட்டேன்”.என்று கூலாக விராட் கோலி பதிலளித்தார்.