ஜெயிக்கிறமா...தோக்குறமானு முக்கியம் இல்ல... சண்டை செய்யனும்; முடிந்தவரை மல்லுக்கட்டி பார்த்த பஞ்சாப் ; அபார வெற்றி பெற்றது லக்னோ !! 1
ஜெயிக்கிறமா…தோக்குறமானு முக்கியம் இல்ல… சண்டை செய்யனும்; முடிந்தவரை மல்லுக்கட்டி பார்த்த பஞ்சாப் ; அபார வெற்றி பெற்றது லக்னோ

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி 56 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

16வது ஐபிஎல் தொடரின் 38வது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் மோதின.

பஞ்சாப்பின் மொஹாலி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

ஜெயிக்கிறமா...தோக்குறமானு முக்கியம் இல்ல... சண்டை செய்யனும்; முடிந்தவரை மல்லுக்கட்டி பார்த்த பஞ்சாப் ; அபார வெற்றி பெற்றது லக்னோ !! 2

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 257 ரன்கள் குவித்தது. அந்த அணி சார்பில் அதிகபட்சமாக ஸ்டோய்னிஸ் 72 ரன்களும், கெய்ல் மெயர்ஸ் 54 ரன்களும் எடுத்தனர்.

ஜெயிக்கிறமா...தோக்குறமானு முக்கியம் இல்ல... சண்டை செய்யனும்; முடிந்தவரை மல்லுக்கட்டி பார்த்த பஞ்சாப் ; அபார வெற்றி பெற்றது லக்னோ !! 3

இதன்பின் 258 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எட்ட முடியாத இலக்கை துரத்தி களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு அதர்வா டைடே 66 ரன்களும், சிங்கந்தர் ரசா 34 ரன்களும் எடுத்து கொடுத்தாலும், ஷிகர் தவான், லிவிங்ஸ்டன், ஷாருக் கான் போன்ற பஞ்சாப் அணியின் மிக முக்கிய வீரர்கள் தங்களது பங்களிப்பை செய்ய தவறியதால் 19.5 ஓவரில் 201 ரன்கள் எடுத்த போது பஞ்சாப் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி 56 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ஜெயிக்கிறமா...தோக்குறமானு முக்கியம் இல்ல... சண்டை செய்யனும்; முடிந்தவரை மல்லுக்கட்டி பார்த்த பஞ்சாப் ; அபார வெற்றி பெற்றது லக்னோ !! 4

லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி சார்பில் அதிகபட்சமாக யஸ் தாகூர் 4 விக்கெட்டுகளையும், நவீன் உல் ஹக் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *