பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளரான அணில் கும்ப்ளேவை அணியின் பயிற்சியாளராக தொடர்வதற்கு பஞ்சாப் கிங்ஸ் அணி இன்னும் முடிவு செய்யவில்லை என்று அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஐபிஎல் தொடரில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் வளமான அணியாக இருந்தும் ஒரு முறை கூட கோப்பையை வெல்லாத அணி என்ற அவர் பெயரை பெற்றிருக்கும் பஞ்சாப் கிங்ஸ் அணி, எப்படியாவது டைட்டில் பட்டதை வெல்ல வேண்டும் என்று ஆண்டுதோறும் பல்வேறு விதமான முயற்சிகளை செய்து வருகிறது.
கேப்டனை மாற்றுவது., பயிற்சியாளரை மாற்றுவது., அணி வீரர்களை மாற்றுவது .. ஏன் இன்னும் சொல்லப்போனால் அணியின் பெயரையே மாற்றுவது.. என பல்வேறு முயற்சியை செய்தும் பஞ்சாப் அணியால் தன்னுடைய லட்சியத்தை நிறைவேற்ற முடியவில்லை.
இந்த நிலையில் பஞ்சாப் கிங்ஸ் அணி மீண்டும் தன்னுடைய அணியின் பயிற்சியாளரை மாற்றுவதற்கான முன்னேற்பாடுகளை செய்து வருவதாக பஞ்சாப் கிங்ஸ் அணியின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அந்த வகையில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக திகழ்ந்த இந்திய அணியின் முன்னாள் வீரர் அணில் கும்ப்ளேவை மீண்டும் அணியின் பயிற்சியாளராக நீட்டிப்பது குறித்து பஞ்சாப் கிங்ஸ் அணி யோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
பஞ்சாப் கிங்ஸ் அணி இவரது பயிற்சியின் கீழ் 42 போட்டிகளில் பங்கேற்று வெறும் 19 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது, இதனால் இவரை அணியிலிருந்து கழட்டிவிட்டு இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் இயான் மார்கன், மற்றும் இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளராக இருந்த ட்ரெவர் பாய்லிஸ் போன்ற ஜாம்பவான்களை அணியில் இணைப்பதற்கு பஞ்சாபின் திட்டமிட்டு வருவதாகவும் தாவல்கள் வெளியாகி உள்ளது.