டூவைன் பிராவோ
டூவைன் பிராவோவை அணியில் இருந்து கழட்டிவிட்டது ஏன்..? விளக்கம் கொடுத்த சென்னை அணியின் காசி விஸ்வநாதன்

அடுத்த வருட ஐபிஎல் தொடருக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து டூவைன் பிராவோவை விடுவித்ததற்கான காரணத்தை சென்னை அணியின் தலைமை செயல் அதிகாரியான காசி விஸ்வநாதன் வெளியிட்டுள்ளார்.

இந்தியாவில் கடந்த 2008ம் ஆண்டில் இருந்து, உள்ளூர் டி.20 தொடரான ஐபிஎல் தொடர் மிக பிரமாண்டமாக நடத்தப்பட்டு வருகிறது.

சென்னை அணி

இதுவரை மொத்தம் 15 சீசன்கள் நிறைவடைந்துள்ளன. அடுத்த வருடத்திற்கான தொடர் வழக்கம் போல் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான மினி ஏலம் டிசம்பர் 23ம் தேதி நடைபெற உள்ளது. இதனால் ஒவ்வொரு அணியும் தங்களுக்கு தேவையான வீரர்களை மட்டும் தக்க வைத்து கொண்டு, மற்ற வீரர்களை விடுவித்தன.

இதில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, டூவைன் பிராவோ, கிரிஸ் ஜோர்டன், ஜெகதீஷன், உத்தப்பா போன்ற வீரர்களை விடுவித்தது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஒரு அடையாளமாக திகழ்ந்து வந்த டூவைன் பிராவோவை நீக்கியது ஏன் என சென்னை அணியின் ரசிகர்களே கேள்வி எழுப்பி வரும் நிலையில், இதற்கான காரணத்தை சென்னை அணியின் தலைமை செயல் அதிகாரியான காசி விஸ்வநாதனே வெளியிட்டுள்ளார்.

டூவைன் பிராவோ

இது குறித்து காசி விஸ்வநாதன் பேசுகையில், “டூவைன் பிராவோ சென்னை அணியின் அடையாளம், அவர் இப்பொழுதும் எங்களது வீரர் தான். ஆனால் அணியின் எதிர்காலமே அனைவருக்கும் முக்கியம். டூவைன் பிராவோவிற்கு 40 வயதாகிவிட்டதால், அவருக்கு அடிக்கடி காயமும் ஏற்படுகிறது. இதன் காரணமாகவே அவரை அணியில் இருந்து விடுவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது” என்று தெரிவித்தார்.

டூவைன் பிராவோவை அணியில் இருந்து கழட்டிவிட்டது ஏன்..? விளக்கம் கொடுத்த சென்னை அணியின் காசி விஸ்வநாதன் !! 1

கிரிஸ் ஜோர்டன், ஆடம் மில்னே விடுவிக்கப்பட்டது குறித்து பேசிய காசி விஸ்வநாதன், “கிரிஸ் ஜோர்டன் அதிக அனுபவமிக்க வீரர் தான் என்றாலும், அவரால் இந்திய ஆடுகளங்களில் சிறப்பாக செயல்பட முடியவில்லை. அவரது பந்துவீச்சு நமது ஆடுகளத்தில் எடுபடுவது இல்லை. எனவே தான் அவரை நீக்கினோம். அதே போல் ஆடம் மில்னே தொடர்ந்து காயத்தால் அவதிப்பட்டு வருவதால் தான் அவரை நீக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது” என்று தெரிவித்தார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *