ஆரம்பத்தில் அமைதி… கடைசி நேரத்தில் வெறித்தனமான போராட்டம்; டெல்லியிடம் போராடி வீழ்ந்தது மும்பை இந்தியன்ஸ்
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
17வது ஐபிஎல் தொடரின் 43வது போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின.
டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிடல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்உ 257 ரன்கள் குவித்தது. டெல்லி அணியில் அதிகபட்சமாக ஜேக் பிரேசர் 27 பந்துகளில் 84 ரன்கள் எடுத்தார்.
இதன்பின் 258 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்கை துரத்தி களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு துவக்கமே சரியாக அமையைல்லை. ரோஹித் சர்மா 8 ரன்னிலும், இஷான் கிஷன் 20 ரன்னிலும் விக்கெட்டை இழந்து ஏமாற்றம் கொடுத்தனர்.
இதன்பின் களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் 26 ரன்களில் விக்கெட்டை இழந்தார். கேப்டன் ஹர்திக் பாண்டியா 24 பந்துகளில் 46 ரன்கள் எடுத்து கொடுத்தார். வதேரா 4 ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றம் கொடுத்தார். அடுத்ததாக களமிறங்கிய டிம் டேவிட்டின் அதிரடி மூலமும் திலக் வர்மாவின் கடுமையான போராட்டத்தின் மூலமும் கடைசி மூன்று ஓவரில் 68 ரன்கள் எடுத்தால் வெற்றி நிலையை மும்பை இந்தியன்ஸ் அணி சந்தித்தது.
முகேஷ் குமார் வீசிய போட்டீன் 18வது ஓவரின் முதல் மற்றும் மூன்றாவது பந்தில் சிக்ஸரும், இரண்டாவது பந்தில் பவுண்டரியும் அடித்த டிம் டேவிட் நான்காவது பந்தில் விக்கெட்டை இழந்தார். அடுத்தடுத்து களத்திற்கு வந்த முகமது பியூஸ் சாவ்லா ஒரு சிக்ஸரும், முகமது நபி ஒரு சிக்ஸரும் அடித்ததன் மூலம் கடைசி ஓவரில் கடைசி ஒரு ஓவருக்கு 25 ரன்கள் தேவை என்ற நிலையை மும்பை அணி அடைந்தது. கடைசி ஓவரை எதிர்கொள்ள களத்தில் இருந்த திலக் வர்மா கடைசி ஓவரின் முதல் பந்திலேயே ரன் அவுட்டானார். இதனால் இலக்கை எட்ட முடியாமல் நூழிலையில் வெற்றியை தவறவிட்ட மும்பை இந்தியன்ஸ் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.