அதிசயமாக டாஸை வென்ற ருத்துராஜ் கெய்க்வாட்… பெங்களூர் அணிக்கு எதிராக பந்துவீச்சை தேர்வு செய்தது சென்னை சூப்பர் கிங்ஸ்
பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
17வது ஐபிஎல் தொடரின் மிக முக்கிய போட்டியான சென்னை சூப்பர் கிங்ஸ் – பெங்களூர் இடையேயான போட்டி பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.
ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுவதற்கு இரு அணிகளுக்குமே மிக முக்கியமான இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனான ருத்துராஜ் கெய்க்வாட் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.
இந்த போட்டிக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆடும் லெவனில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மொய்ன் அலி நாடு திரும்பியுள்ளதால் அவருக்கு பதிலாக மிட்செல் சாட்னருக்கு ஆடும் லெவனில் இடம் கொடுக்கப்பட்டுள்ளது.
பெங்களூர் அணியுடனான போட்டிக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆடும் லெவன்;
ரச்சின் ரவீந்திரா, ருத்துராஜ் கெய்க்வாட், டேரியல் மிட்செல், அஜின்கியா ரஹானே, ரவீந்திர ஜடேஜா, தோனி, மிட்செல் சாட்னர், ஷர்துல் தாகூர், துசார் தேஸ்பாண்டே, சிமர்ஜித் சிங், மகேஷ் தீக்ஷன்னா.
சென்னை அணியுடனான போட்டிக்கான பெங்களூர் அணியின் ஆடும் லெவன்;
டூபிளசிஸ், விராட் கோலி, கிளன் மேக்ஸ்வெல், ராஜத் படித்தர், கேமிரான் க்ரீன், மஹிபால் லம்ரோர், தினேஷ் கார்த்திக், கரண் சர்மா, யஸ் தயால், லோகி பெர்குசன், முகமது சிராஜ்.