ரசிகர்களை ஏமாற்றாத பெங்களூர் வீரர்கள்... பேட்டிங்கில் மாஸ்; சென்னை அணிக்கு 219 ரன்கள் இலக்கு !! 1

ரசிகர்களை ஏமாற்றாத பெங்களூர் வீரர்கள்… பேட்டிங்கில் மாஸ்; சென்னை அணிக்கு 219 ரன்கள் இலக்கு

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 218 ரன்கள் எடுத்துள்ளது.

ப்ளே ஆஃப் சுற்றுக்கான நான்காவது அணியை இறுதி செய்யும் சென்னை சூப்பர் கிங்ஸ் – பெங்களூர் இடையேயான முக்கியமான போட்டி பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டனான ருத்துராஜ் கெய்க்வாட் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய பெங்களூர் அணிக்கு விராட் கோலி மற்றும் டூபிளசிஸ் ஆகியோர் மிக சிறப்பான துவக்கத்தை அமைத்து கொடுத்தனர். விராட் கோலி 29 பந்துகளில் 47 ரன்களும், டூபிளசிஸ் 39 பந்துகளில் 54 ரன்களும் எடுத்தனர்.

இதன்பின் களமிறங்கிய ராஜத் படித்தரும் பெங்களூர் அணிக்கான தனது பங்களிப்பை சரியாக செய்து 23 பந்துகளில் 41 ரன்கள் எடுத்து கொடுத்தார். அடுத்ததாக களத்திற்கு வந்த தினேஷ் கார்த்திக் 6 பந்துகளில் 14 ரன்களும், அதிரடி நாயகன் கிளன் மேக்ஸ்வெல் 5 பந்துகளில் 16 ரன்களும் எடுத்து கொடுத்ததன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்துள்ள பெங்களூர் அணி 218 ரன்கள் குவித்துள்ளது.

பந்துவீச்சில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பில் அதிகபட்சமாக ஷர்துல் தாகூர் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினாலும் 61 ரன்களை வாரி வழங்கினார். துசார் தேஸ்பாண்டே மற்றும் மிட்செல் சாட்னர் ஆகியோர் தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *