2022 ஐபிஎல் தொடர் மார்ச் மாத இறுதியில் நடைபெறும் என்று அறிவித்து விட்டதால் ஐபிஎல் தொடர் சம்பந்தமான கருத்துக்கள் அதிகமாகப் பேசப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் ஐபிஎல் தொடரில் அதிவேக அரை சதத்தை பதிவு செய்து 5 வீரர்கள் பற்றி காண்போம்.
இஷன் கிஷன், சுரேஷ் ரெய்னா (16 பந்துகள்)
2021 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் இஷான் கிஷன், ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் 16 பந்துகளில் தனது அரைசதத்தை பதிவு செய்தார். அந்த போட்டியில் இஷான் கிஷன் மொத்தமாக 32 பந்துகளில் 84 ரன்கள் அடித்து அசத்தினார் இதன்மூலம் வெற்றியை பதிவு செய்தது.

அதேபோன்று 2014 ஆம் ஆண்டு பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா 16 பந்துகளில் தனது அரைசதத்தை பதிவு செய்தார், அதில் அவர் மொத்தமாக 25 பந்துகளில் 85 ரன்கள் அடித்து அசத்தினார்.
இதன்மூலம் இஷான் கிஷன் மற்றும் சுரேஷ் ரெய்னா ஆகிய இருவரும் ஐபிஎல் தொடரில் அதிவேக அரைசதம் அடித்த வீரர் என்ற வரிசையில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளனர்.
