சுனில் நரேன், யூசுஃப் பதான் (15- பந்துகள்)
கொல்கத்தா அணியின் அதிரடி வீரர் சுனில் நரேன் 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் 15 பந்துகளில் தனது அரைசதத்தை பதிவு செய்தார். இதன் மூலம் அந்த போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.

அடுத்ததாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் முன்னாள் வீரர் யூசுப் பதான் 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் 15 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார், மொத்தமாக அந்த போட்டியில் யூசுப் பதான் 22 பந்துகளில் 72 ரன்கள் அடித்தார் இதன் மூலம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இந்த போட்டியில் வெற்றி பெற்றது.

இதன் மூலம் சுனில் நரேன் மற்றும் யூசுப் பதான் ஆகிய இருவரும் ஐபிஎல் தொடரில் 2- வது அதிவேக அரைசதம் அடித்தவர் என்ற சாதனை படைத்தவர்.