2022 ஐபிஎல் தொடர் வருகிற மார்ச் 26ம் தேதி நடைபெறும் என்று பிசிசிஐ அறிவித்து விட்டதால்,ஐபிஎல் தொடர் சம்பந்தமான கருத்துக்களை கிரிக்கெட் வல்லுநர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் அதிகமாக பேசி வருகின்றனர்.
இந்த நிலையில் 2022 ஐபிஎல் தொடரில் பலம் வாய்ந்த அணியாக திகழும் இந்த மூன்று அணிகள் தான் கோப்பையை வெல்லும் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
அப்படிப்பட்ட மூன்று அணிகள் குறித்து இங்கு காண்போம்
சென்னை சூப்பர் கிங்ஸ்
ஐபிஎல் தொடரில் 4 முறை டைட்டில் பட்டத்தை வென்ற நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் 2022 ஐபிஎல் தொடரிலும் பலம்வாய்ந்த அணியாகவே கருதப்படுகிறது.
கிட்டத்தட்ட 8 ஆல்ரவுண்டர்களை உள்ளடக்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங் மற்றும் பந்து வீச்சு என இரண்டிலும் சமபலம் வாய்ந்த அணியாகவே உள்ளது, குறிப்பாக அந்த அணியில் கேப்டன் மகேந்திர சிங் தோனி இருப்பதால் சென்னை அணிக்கு அது கூடுதல் பலமாக அமைந்துவிட்டது,மேற்கூறப்பட்ட காரணங்களை எல்லாம் வைத்துப் பார்க்கையில் 2022 ஐபிஎல் தொடரிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பையை வெல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
