ரஞ்சிக் கோப்பை 2017/18 : பதான் சகோதரர்கள் அசத்தல், ரெய்னா சொதப்பல்

இந்தியாவின் முதல் தரப் போட்டித் தொடரான ரஞ்சிக் கோப்பைத் தொடர் 4 நாட்களுக்கு முன் துவங்கியது. 4 பிரிவுகளாக பிரிவிற்க்கு 7 அணிகள் வீதம் 28 அணிகள் கலந்து கொண்டு முதல் சுற்றுப் போட்டிகள் நடைபெற்று வருகிறது.

ஆரம்பித்த 3 நாட்களிலேயே பல அற்புத புள்ளி விவரங்கள் தொடர்ந்து வருகின்றன. டெல்லி அணிக்காக கௌதம் கம்பிர் 40ஆவது சதத்தை பூர்த்தி செய்துள்ளார். ஹிமாச்சல் பிரதேச அணியின் பேட்ஸ்மேன் பிரசாந்த் சோப்ரா பஞ்சாபிற்கு எதிராக முச்சதம் கண்டு, இந்த தொடரின் முதல் முச்சதத்தை பூர்த்தி செய்துள்ளார்.

மேலும், பதான் சகோதரர்கள் தங்கள் அணியான பரொடாவை ஃபாலோ ஆனில் இருந்து மீட்க கடுமையாக போராடி தங்களது ஃபார்மை நிரூபித்தனர். இருவரும் சேர்ந்து மத்திய பிரதேச அணிக்கு எதிராக 188 ரன் சேர்த்தனர். இதில் யூசப் பதான் 111 ரன்னும் இர்ஃபான் பதான் 80 ரன்னு அடித்தனர். மூன்றாவது நாள் இறுதியில் பரோட அணி 302 ரன் எடுத்தது.

ஏ பிரிவில் டெல்லியின் பெரோசா கோட்லா மைதானத்தில் நடந்த போட்டியில் கௌதம் கம்பி சதம் அடித்தார்.இதே பிரிவில் உத்திர பிரதேச அணிக்கும் ரெயில்வேஸ் அணிக்கும் நடந்த போட்டியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சுரேஷ் ரெய்னா சோபிக்கத்தவறிவிட்டார். மேலும், மோசமாக உத்திரபிரதேச அணி 72 ரன்னிற்க்கு ஆல் அவுட் ஆனது.

சி பிரிவில் தமிழ்நாடு மற்றும் ஆந்திராவிற்கு இடையே நடக்கும் போட்டியில் கடைசி நாளான இன்று தற்போது வரை தமிழ்நாடு அணி 104 ரன் லீட் வைத்து ஆடிக்கொண்டிருக்கிறது.

Editor:

This website uses cookies.