இந்தியன் டீம்ல விராட்கோலி பேரை பாத்தாலே ரொம்ப கடுப்பா இருக்கு; காரணம் என்ன? விளக்கமளிக்கும் முன்னாள் இந்திய வீரர்!! 1

இந்திய அணியில் விராட் கோலியின் பெயரை இப்படி பார்க்கையில் மிகவும் வித்தியாசமாக இருக்கிறது என முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா மனம் திறந்து பேசியிருக்கிறார்.

இந்திய அணியில்  அனைத்துவித போட்டிகளுக்கும் கேப்டன் பதவியில் இருந்து வந்த விராட் கோலி, டி20 போட்டிகளில் இருந்து ராஜினாமா செய்தார். அதன் பிறகு ஒருநாள் போட்டிகளிலிருந்து அவரது கேப்டன் பதவியை பிசிசிஐ நீக்கி, ரோஹித் சர்மாவிடம் கொடுத்தது. இருப்பினும் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து விராட் கோலி கேப்டனாக நீடிப்பார் என்று பிசிசிஐ தெளிவாக கூறிவிட்டது. 

இந்தியன் டீம்ல விராட்கோலி பேரை பாத்தாலே ரொம்ப கடுப்பா இருக்கு; காரணம் என்ன? விளக்கமளிக்கும் முன்னாள் இந்திய வீரர்!! 2

இந்நிலையில் ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த ஒரு தொடரில் காயம் காரணமாக ரோகித் சர்மா இடம் பெறவில்லை. ஆகையால் புதிய கேப்டனாக கேஎல் ராகுல் நியமிக்கப்பட்டார். விராட் கோலியை ஏன் நியமிக்கவில்லை? தற்காலிகமாகக் கூட நியமிக்காதது ஏன்? என பலரும் கேள்வி எழுப்பினர். இதே கேள்வியை இந்திய அணியின் முன்னாள் துவக்க வீரர் ஆகாஷ் சோப்ராவும் எழுப்பியிருந்தார். மேலும் இந்திய அணியில் விராட் கோலியின் பெயரை இப்படி பார்க்கையில் மிகவும் அசவுகரியமாக இருக்கிறது என்று மனம் திறந்து பேசினார். 

“இந்த உண்மையை நான் அனைவருக்கும் கூறியாக வேண்டும். இந்திய அணி அறிவிக்கப்பட்டபோது, விராட் கோலியின் பக்கத்தில் கேப்டன் என குறிப்பிடப் படவில்லை என்பது மிகவும் வருத்தம் அளித்தது. இதைப் பார்க்கையில் எனக்கு சற்று அசவுகரியமாக இருந்தது. இத்தனை ஆண்டுகாலம் அவரை அப்படி பார்த்துவிட்டு திடீரென கேப்டனாக இல்லை என பார்க்கையில் வித்தியாசமாக தோன்றுகிறது. சமீபத்தில் நியூசிலாந்து அணியுடனான டி20 தொடரில் அவர் இடம் பெறவில்லை. ஆகையால் எந்தவித வித்தியாசமும் தெரியவில்லை. தற்போது அணியில் இருந்து கொண்டே, அவரை கேப்டன் என குறிப்பிடாமல் இருந்தது, இதுவரை காணாத ஒரு புது உணர்வாகவும் இருந்தது.

இந்தியன் டீம்ல விராட்கோலி பேரை பாத்தாலே ரொம்ப கடுப்பா இருக்கு; காரணம் என்ன? விளக்கமளிக்கும் முன்னாள் இந்திய வீரர்!! 3

எதிர்காலத்தை கருத்தில் கொண்டு பிசிசிஐ எடுத்த முடிவை ஒப்புக்கொண்டாக வேண்டும். அதே நேரம் நல்ல பார்மில் இருக்கும் விராட் கோலியை இனி கேப்டன் பதவியில் இருக்க வேண்டாம் என கூறியதும் தவறாக தெரிகிறது. கேஎல் ராகுல் விளையாடிவரும் விதம் இந்திய அணியை முன்னோக்கி எடுத்துச் செல்கிறது. அவருக்கு கூடுதலாக கேப்டன் பொறுப்பு கொடுக்கப்பட்டது பெரும் வரவேற்பையும் பெற்றிருக்கிறது. ரோகித் சர்மா இல்லாதது இந்திய அணிக்கு பின்னடைவை கொடுத்தாலும், ராகுலின் சமீபத்திய பார்ம் நம்பிக்கை அளிக்கும் விதமாக இருக்கிறது.” என்றார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *