ரிஷப் பண்ட் சென்ற ஆண்டு ஆஸ்திரேலிய தொடருக்கு முன்னர் பல வகையில் பலராலும் விமர்சன படுத்தப்பட்டார். ஆனால் அதையெல்லாம் உடைத்து எறியும் வண்ணம் கடந்த ஆண்டு ஆஸ்திரேலிய தொடர் தொடங்கி இந்த ஆண்டு நடந்து முடிந்துள்ள இங்கிலாந்து தொடரிலும், அதேபோல் ஐபிஎல் தொடரிலும் ஒரு வீரராகவும் அதே சமயம் ஒரு கேப்டனாகவும் மிக சிறப்பாக செயல்பட்டு அதன் மீது எழுந்த அனைத்து விமர்சனங்களையும் தகர்த்து எறிந்து உள்ளார்.

ஆஸ்திரேலியாவில் நடந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணியை வெற்றி பெறச் செய்ததும், அதேபோல இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் மிக சிறப்பாக விளையாடி அணியை வெற்றி பெறச் செய்ததும், இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் கிடைத்த இரண்டு வாய்ப்பையும் மிக அற்புதமாக பயன்படுத்தி இரண்டு அரை சதங்கள் குவித்ததும், இதற்கு எல்லாம் மேல் டெல்லி அணியை அவர் தலைமை தாங்கி மிகச்சிறப்பாக அணியை வழிநடத்தி வெற்றிகளை வாங்கி குவித்தது என அடுத்தடுத்து தனது திறமையை நாளுக்கு நாள் காட்டிக் கொண்டே வருகிறார்.
இதன் காரணமாகவே பாகிஸ்தானைச் சேர்ந்த சல்மான் பட் ரிஷப் பண்ட் ஒரு வீரராக சிறப்பாக செயல்படுவதை தாண்டி தற்பொழுது ஒரு கேப்டனாக மிக சிறப்பாக தனது பணியை செய்து வருகிறார் என்றும், இந்தியாவின் வருங்கால கேப்டனாக ரிஷப் பண்ட் தான் நிச்சயம் இருப்பார் என்றும் கூறியிருந்தார். தற்பொழுது அது அது குறித்து இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சபா கரிம் ஒரு சில விஷயங்களை பேசி உள்ளார்.

ரிஷப் பண்ட் இன்னும் கடுமையாக உழைக்க வேண்டும்
இது குறித்து பேசியுள்ள சபா கரிம், ரிஷப் பண்ட் ஒரு வீரராக நாளுக்கு நாள் தனது திறமையை காண்பிக்க தவறியதில்லை. அதேசமயம் ஐபிஎல் தொடரில் மிக சிறப்பாக அணியை தலைமை தாங்கி வெற்றியை குவித்திருக்கிறார். அவருடைய ரோல்மாடல் மகேந்திர சிங் தோனி போல அவர் பல இடங்களில் மிக நிதானித்து, அமைதியாக அணியை வழிநடத்தி தன்னுடைய தலைமை பண்பை காண்பித்து உள்ளார் என்று கூறியுள்ளார்.
தற்பொழுது அவர் மிகச்சிறந்த வீரர் என்று கூறலாம் அதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் அவர் இந்திய அணியின் வருங்கால கேப்டன் ஆவதற்கு முன்பாக பல விஷயங்களில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எனவே அவர் தற்பொழுது சிறப்பாக விளையாடிக் கொண்டிருப்பது போல, மூன்று வகை கிரிக்கெட்டிலும் மிக சிறப்பாக இதேபோல் தொடர்ந்து செயல்பட வேண்டும். அவ்வாறு மிக சிறப்பாக செயல்பட்டு அணியில் தவிர்க்க முடியாத ஒரு வீரராக வருங்காலத்தில் வலம் வரவேண்டும்.

அப்படி வலம் வரும் வேளையில் நிச்சயமாக தலைமை பொறுப்பு அவரிடம் தானாக சென்றடையும் என்று கூறியுள்ளார். அப்படி வருங்காலத்தில் இந்திய அணியை தலைமை தாங்குவதற்கு அவர் முதலில் தன்னை ஒரு மிகச்சிறந்த வீரராகவும் அதேசமயம் அணையை தலைமை தாங்குவதுக்கும் ஏற்ப தன்னை தினமும் தயார் படுத்திக் கொண்டிருக்க வேண்டும் என்று இறுதியாக கூறி முடித்தார்.