தோனி வேணாம் என அடம்பிடித்த கங்குலி... 10 நாட்கள் தோனிக்கு ஆதரவாக வாக்குவாதம் செய்த முன்னாள் ; வெளியான தகவல் !! 1

மகேந்திர சிங் தோனி விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆக இந்திய அணியில் நுழைந்து அதன்பின்னர் தலைவராகி இந்திய அணிக்காக மூன்று வகை கிரிக்கெட் கோப்பைகளை பெற்று தந்த கதை நம் அனைவருக்கும் தெரியும். ஆனால் அவர் இந்திய அணியில் நுழைந்த கதை அவ்வளவாக தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

தற்பொழுது மகேந்திர சிங் தோனி எப்படி இந்திய அணியில் உள்ளே வந்தார் என்பது குறித்து இந்திய முன்னாள் வீரர் கிரண் மோர் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

Watch: Took 10 days to get Ganguly to let Dhoni keep wickets in 2003-'04  Duleep

ஒரு மிகச் சிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனை நாங்கள் தேடி வந்தோம்

2003 உலகக் கோப்பை தொடர் நடந்து முடிந்தவுடன், நாங்கள் அனைவரும் ஒன்றுகூடி இந்திய அணிக்கு ஒரு இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனை தேடி வந்தோம். நாங்கள் தேடி வந்த வீரர் ஆறாவது அல்லது ஏழாவது இடத்தில் இறங்கி அதிரடியாக விளையாடக்கூடிய வகையில் என்பதில் உறுதியாக இருந்தோம்.

Sourav Ganguly regrets not having MS Dhoni in the 2003 World Cup squad |  The SportsRush

அதற்கு முன்பு வரை சுமார் 75 ஒருநாள் போட்டிகளில் ராகுல் டிராவிட் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆக விளையாடி வந்தார். 2003ஆம் ஆண்டு நடந்த உலக கோப்பை தொடரில் கூட ராகுல் டிராவிட் மிக சிறப்பாக இந்திய அணிக்காக விளையாடினார். இருப்பினும் நாங்கள் வேறு ஒரு பவர் ஹிட்டிங் விக்கெட் கீபபிங் பேட்ஸ்மேன் ஒருவரை தேடி தேடி வந்தோம்.

சவுரவ் கங்குலியை சமாதானம் செய்ய எங்களுக்கு 10 நாட்கள் தேவைப்பட்டது

முதலிலேயே சௌரவ் கங்குலி முடிவெடுத்தபடி தீப் தாஸ்குப்தாவை விளையாட வைப்பதாய் தான் இருந்தது. ஆனால் நாங்கள் ஒரு சிலர் சேர்ந்து மகேந்திர சிங் தோனி பெயரை முன் எடுத்து வைத்தோம். முதலில் சவுரவ் கங்குலி சம்மதிக்கவில்லை.

நாங்கள் அனைவரும் சேர்ந்து மகேந்திர சிங் தோனியின் பெயரை கூறியதற்கு ஒரு மிகப் பெரிய கதை உண்டு. உள்ளூர் ஆட்டங்களில் ஒரு போட்டியில் டீம் ஸ்கோர் அடித்த 170 ரன்களில் மகேந்திர சிங் தோனி ஒற்றை ஆளாக நின்று 130 ரன்களை விளாசினார். எனவே அவர் இந்திய அணியில் விளையாடினால் நன்றாக இருக்கும் என்று நினைத்தோம்.

TEAM MS DHONI #Dhoni on Twitter: "#thisdaythatyear in 2005. MS Dhoni scored  1st Intl 100 vs Pakistan.148 runs in 123 balls in Visakhapatnam. #Dhoni… "

நாங்கள் அனைவருமாக சேர்ந்து பத்து நாட்களுக்கு மேல் கங்குலி அவர்களையும் இந்திய அணித் தேர்வு கமிட்டி மெம்பர்களையும் விடாமல் மகேந்திர சிங் தோனி விளையாட வைக்குமாறு வற்புறுத்தினோம். இறுதியில் மகேந்திர சிங் தோனியின் திறமையை கண்ட அனைவரும் ஒருவழியாக இந்திய அணிக்கு இனி மகேந்திர சிங் தோனி விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேனாக விளையாடட்டும் என்ற முடிவுக்கு வந்தனர். இந்த விவரங்களை கிரன் மோர் கர்ப்பிணி அம்புரோஸ் மற்றும் கரிஷ்மா கோடக் ஆகிய இருவரும் இணைந்து நடத்தும் இன்டர்வியூவில் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *