இது மட்டும் நடந்தா உயிருக்கே உத்திரவாதம் கிடையாது; மைக்கெல் ஹசி வேதனை !! 1

இது மட்டும் நடந்தா உயிருக்கே உத்திரவாதம் கிடையாது; மைக்கெல் ஹசி வேதனை

டி.20 உலகக்கோப்பை ஆஸ்திரேலியாவில் நடக்க இருப்பதை நினைத்தாலே தனக்கு பயமாக இருப்பதாக முன்னாள் வீரரான மைக்கெல் ஹசி தெரிவித்துள்ளார்.

டி.20 உலகக்கோப்பையை அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் வைத்து நடத்த ஐ.சி.சி., திட்டமிட்டிருந்தது. கொரோனாவின் கோரதாண்டவம் இன்னும் முடியாமல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்வதால் இந்த வருடம் டி.20 உலகக்க்கோப்பையை நடத்துவதற்கு வாய்ப்பே இல்லை என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் திட்டவட்டமாக தெரிவித்திருந்தது.

டி.20 உலகக்கோப்பையை தள்ளி வைத்தாலோ அல்லது ரத்து செய்தாலோ மிகப்பெரும் இழப்பு ஏற்படும் என்பதால் ஐ.சி.சியும் இறுதி முடிவு எடுக்க முடியாமல் திணறி வருகிறது. இந்தநிலையில் இது குறித்து பேசியுள்ள முன்னாள் வீரர் மைக்கெல் ஹசி டி.20 உலகக்கோப்பையை நடத்துவதை நினைத்தாலே தனக்கு பயமாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இது மட்டும் நடந்தா உயிருக்கே உத்திரவாதம் கிடையாது; மைக்கெல் ஹசி வேதனை !! 2

இது குறித்து மைக்கெல் ஹசி பேசியதாவது;

‘‘டி20 உலக கோப்பை ஆஸ்திரேலியாவில் நடத்த இருப்பது எனக்கு உண்மையிலேயே பயத்தை அளிக்கிறது. அதற்கான காரணம் உள்ளது. ஒரு அணி ஆஸ்திரேலியாவுக்கு வருகிறது என்றால் சரியானது. அந்த அணியை ஒரு இடத்திற்கு அழைத்துச் சென்று தனிமைப்படுத்தி தொடருக்கு சிறப்பாக தயார் படுத்தி விடலாம்.

ஆனால் ஏராளமான அணிகள் வரும்போது அவர்களை தனிமைப்படுத்துவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். அதன்பின் அவர்களை நாட்டின் பல்வேறு இடங்களுக்கு பலத்து முன்னெச்சரிக்கையுடன் அழைத்துச் செல்ல வேண்டும். இதற்கான திட்டத்தை வடிவமைப்பது படுபயங்கரமானது. இதற்கிடையே டி20 உலக கோப்பை 2021 அல்லது 2022 தள்ளிப்போக வாய்ப்பு இருப்பதாக நாங்கள் கேள்விப்படுகிறோம்.

இது மட்டும் நடந்தா உயிருக்கே உத்திரவாதம் கிடையாது; மைக்கெல் ஹசி வேதனை !! 3

ஆனால் இந்தியா தொடருக்கு நான் ஆதரவு கொடுப்பேன். ஏனென்றால் ஒரு அணி என்பதால் ஒரே இடத்தில் அவர்களை எளிதாக கையாள முடியும். உதாரணத்திற்கு அடிலெய்டு மைதானம் ஓட்டல் தொடர்புடன் கட்டப்பட்டுள்ளது. ஆகவே, இந்திய அணியைச் சேர்ந்தவர்கள் அங்கேயே இருக்க முடியும்” என்றார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *