பும்ரா, ரோகித் சர்மா

தனது முதுகுப்பகுதியில் அறுவை சிகிச்சை மேற்கொண்ட பும்ராவின் நிலை இப்போது எப்படி இருக்கிறது? மீண்டும் அவர் பவுலிங் செய்ய எவ்வளவு நாள் ஆகும்? என அப்டேட் கொடுத்திருக்கிறது பிசிசிஐ.

கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தென்னாபிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடருக்கு முன்பு பயிற்சி செய்து கொண்டிருந்த பும்ராவிற்கு முதுகு பகுதியில் அசவுகரியம் ஏற்பட்டது. உடனடியாக அவரை பரிசோதித்த மருத்துவர்கள் பும்ராவிற்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என தெரிவித்தனர்.

எப்படி இருந்த மனுஷன்யா.. ஐபிஎல்லும் ஆடமுடியாது, ஆசியகோப்பையும் ஆடமுடியாது; பும்ரா குறித்து அப்டேட் கொடுத்த பிசிசிஐ! 1

2022 அக்டோபர்-நவம்பர் மாதம் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் இடம்பெற்று இருந்த பும்ரா, இந்த காயம் காரணமாக உலககோப்பை அணியிலிருந்து நீக்கப்பட்டார்.

தொடர்ந்து இந்திய தேசிய அகடமியில் சிகிச்சை பெற்று வந்த பும்ரா, கடந்த டிசம்பர் மாதம் கடைசி வாரம் குணமடைந்து விட்டார் என்று தகவல்கள் வெளியானது. ஆனால், அப்போது தேர்வுக்குழு தலைவராக செயல்பட்ட சேத்தன் சர்மா, இவரை இந்திய அணியில் எடுக்கவில்லை.

பும்ரா, ரோகித் சர்மா

“கடந்த முறை அவசரப்பட்டு இவரை அணியில் எடுத்துவிட்டு, விரைவாக மறுபடியும் காயமடைந்துவிட்டதால் பெரிய சிக்கல் ஆனது. மீண்டும் அந்த தவறை செய்யமாட்டோம். இன்னும் கால அவகாசம் அவருக்கு கொடுக்கிறோம். கூடுதல் ஓய்வு பெற்று உடல்நிலையில் நல்ல மாற்றத்துடன் மீண்டும் இந்திய அணிக்கு வரட்டும்.” என சேத்தன் சர்மா தெரிவித்தார்.

ஆகையால் பும்ராவை இலங்கை, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் என எதிலும் எடுக்கவில்லை. ஆஸி., அணிக்கு எதிரான கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இவர் இருப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனாலும் எடுக்கவில்லை.

அதன் பிறகு இவரது உடல்நிலையை பரிசோதித்த மருத்துவர்கள் மீண்டும் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என அறிவுறுத்தினர். இதனால் ஐபிஎல் தொடரிலும் பும்ரா விளையாட முடியாது என தெரிய வந்திருக்கிறது.

எப்படி இருந்த மனுஷன்யா.. ஐபிஎல்லும் ஆடமுடியாது, ஆசியகோப்பையும் ஆடமுடியாது; பும்ரா குறித்து அப்டேட் கொடுத்த பிசிசிஐ! 2

கடந்த மார்ச் 7ஆம் தேதி இவருக்கு அறுவை சிகிச்சை நடந்தது. அதன் பிறகு பிசிசிஐக்கு தெரிவித்த தகவலின்படி, பும்ரா ஆகஸ்ட் மாதத்திற்கு பிறகு தான் மீண்டும்  பந்துவீச்சில் இறங்கலாம். அதுவரை முழுமையாக குணமடைய ஓய்வு தேவை என தெரிவித்திருக்கின்றனர்.

ஆகஸ்ட் மாதம் வரை இவரால் பந்துவீச முடியாது என்பதால், ஐபிஎல் மட்டுமல்ல, வருகிற ஆசியகோப்பை தொடரிலும் விளையாட முடியாது என உறுதியாகியுள்ளது. நேரடியாக 50-ஓவர் உலகக்கோப்பையில் பங்கேற்க வாய்ப்புகள் இருக்கின்றன.

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *