கங்குலியின் பேச்சை கேட்டு விளையாட மறுத்த ஜஸ்ப்ரிட் பும்ராஹ் !! 1

கங்குலியின் பேச்சை கேட்டு விளையாட மறுத்த ஜஸ்ப்ரிட் பும்ராஹ்

இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் பும்ரா. முகுதுப் பகுதியில் ஏற்பட்ட காயத்தால் கடந்த செப்டம்பர் மாதத்தில் இருந்து விளையாடாமல் உள்ளார்.

தற்போது உடற்தகுதி பெற்றதால் இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா தொடர்களுக்கான இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார்.

இலங்கைக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடர் ஐந்தாம் தேதி தொடங்குகிறது. இதனால் இன்றைய ரஞ்சி போட்டியில் குஜராத் அணிக்கெதிராக கேரளாவை எதிர்த்து விளையாட இருந்தார்.

காயத்தில் இருந்து மீண்ட அவருக்கு, உடற்தகுதியை நிரூபிக்க இது சிறந்த வாய்ப்பாக இருக்கும் என கருதப்பட்டது. ஆனால் பும்ரா பிசிசிஐ தலைவர் மற்றும் செயலாளர் ஜெய் ஷா ஆகியோருடன் பேசியதாக தெரிகிறது.

கங்குலியின் பேச்சை கேட்டு விளையாட மறுத்த ஜஸ்ப்ரிட் பும்ராஹ் !! 2

அப்போது இலங்கை அணிக்கெதிரான விளையாடக் கூடிய இந்திய அணியில் இடம் பிடித்துள்ளதால், சர்வதேச போட்டிக்கு தயாராகுவதில் கவனம் செலுத்தும்படி ஜெய் ஷா கூறியதாக தெரிகிறது.

குஜராத் அணிக்காக விளையாட இருந்த பும்ரா, கடைசி நேரத்தில் விலகியுள்ளார். இந்திய அணிக்கு திரும்பும்போது புதிதாக களம் இறங்குவதாக பும்ரா நினைக்க வேண்டும். மாறாக காயம் குறித்து பரபரப்பான யோசனையுடன் களம் இறங்கக்கூடாது என்று கங்குலி தெரிவித்ததாக கூறப்படுகிறது

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *