ஐபில் மீது கண் வைக்கும் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட்

தற்போது ஆஸ்திரேலியாவில் ஆஷஸ் தொடரில் விளையாடி வரும் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட், ட்ரையங்குளர் தொடரில் இங்கிலாந்து டி20 அணிக்கு ஜோ ரூட்டை கேப்டனாக நியமிக்காக போவதாக தகவல் எழுந்துள்ளது.

ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் நியூஸிலாந்து ஆகிய மூன்று அணிகள் ட்ரையங்குளர் தொடரில் விளையாட இருக்கிறது. முதல் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து அணிகள் பிப்ரவரி 3ஆம் தேதி சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் விளையாடவுள்ளன. அந்த தொடரின் இறுதி போட்டி ஆக்லாந்தில் உள்ள ஈடன் பார்க் மைதானத்தில் பிப்ரவரி 21ஆம் தேதி நடைபெறும்.

The England’s Test skipper is also regarded as one of the modern-day greats of the game, and when it comes to Test cricket, Root is a class apart.

இந்த ஆஷஸ் தொடர் முடிந்ததும், அடுத்து வரும் ஒருநாள் தொடரில் இங்கிலாந்து அணியின் ஜோ ரூட்டுக்கு ஓய்வு கொடுக்க இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது. ஆனால், ஒருநாள் போட்டிகளிலும் விளையாட ஜோ ரூட் ஆர்வம் காட்டி வருகிறார்.

அதே நேரத்தில் இந்தியாவில் இந்தியன் பிரீமியர் லீக் 2018 தொடருக்கான ஏலத்தில் இங்கிலாந்து அணியின் ஜோ ரூட் பதிவு செய்வார் எனவும் தகவல் வந்துள்ளது. இந்த மாதம் 27 மற்றும் 28ஆம் தேதி ஐபில் 2018 தொடருக்கு ஏலம் நடக்கவுள்ளது.

அது மட்டும் இல்லாமல், இங்கிலாந்து அணியின் ஜோ ரூட் டி20 உலக கோப்பையில் சிறப்பாக விளையாட பிளான் செய்கிறார். அத்துடன் இங்கிலாந்து அணிக்காகவும் ஒருநாள் மற்றும் டி20 போட்டியில் சிறப்பாக விளையாடவேண்டும் என்று நினைக்கிறார்.

ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து அணி ஆஷஸ் தொடரில் மோசமாக விளையாடி வருகிறது. முதல் மூன்று போட்டிகளிலும் தோல்வி பெற்று இங்கிலாந்து அணி ஆஷஸ் கோப்பையை கைவிட்டது.

அதே போல் நியூஸிலாந்து அணிக்கு ஒருநாள் தொடர் மற்றும் இங்கிலாந்தில் நடக்கும் 2019 உலகக்கோப்பைக்கான இங்கிலாந்து அணியில் அவருக்கு இடம் கிடைக்காது என்று தெரிகிறது.

Silambarasan Kv: Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

This website uses cookies.