டி.20 தொடரில் இருந்து விலகிய முக்கிய வீரர்; ரசிகர்கள் கவலை !! 1

டி.20 தொடரில் இருந்து விலகிய முக்கிய வீரர்; ரசிகர்கள் கவலை

இங்கிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜாப்ரா ஆர்சர் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இங்கிலாந்த 3-1 எனக் கைப்பற்றியது.

அடுத்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெறுகிறது. இந்தத் தொடர் பிப்ரவரி 4-ந்தேதி தொடங்குகிறது. அதன்பின் 12-ந்தேதி மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் தொடங்குகிறது.

டி.20 தொடரில் இருந்து விலகிய முக்கிய வீரர்; ரசிகர்கள் கவலை !! 2
Jofra Archer chats with England physio Craig de Weymarn before the fourth Test at the Wanderers. The bowler has not played since the first Test in December. Photograph: Stu Forster/Getty Images

டி20 தொடருக்கான இங்கிலாந்து அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. முதல் டெஸ்ட் போட்டிக்குப்பின் ஜாப்ரா ஆர்சருக்கு முழங்கையில் காயம் ஏற்பட்டது. வலி அதிகமாக இருந்ததால் அடுத்த மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் அவர் விளையாடவில்லை.

இந்நிலையில் டி20 தொடரிலும் இருந்து விலகியுள்ளார். இதனால் அவர் இங்கிலாந்து புறப்பட்டுச் சென்றார். அவருக்குப் பதிலாக சகிப் மெஹ்மூத் சேர்க்கப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *