கெய்ல் ஆடும்போது நாம் வேடிக்கை மட்டுமே பார்க்க வேண்டும்: கே.எல் ராகுல் 1

ஐபிஎல் கிரிக்கெட்டில் நேற்று நடைபெற்ற மும்பை இந்தியன்சுக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணியின் அதிரடி மன்னனான கிறிஸ் கெயில் 300 சிக்சர்களை அடித்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றார்.

8 அணிகள் பங்கேற்றுள்ள 12-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் நேற்று மாலை மொகாலியில் உள்ள ஐஎஸ் பிந்த்ரா மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின.

டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேப்டன் அஸ்வின் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 176 ரன்களை எடுத்துள்ளது.கெய்ல் ஆடும்போது நாம் வேடிக்கை மட்டுமே பார்க்க வேண்டும்: கே.எல் ராகுல் 2

இதைத்தொடர்ந்து, 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக லோகேஷ் ராகுலும், கிறிஸ் கெயிலும் இறங்கினர். அணியின் எண்ணிக்கை 53 ஆக இருந்தபோது கெயில் 24 பந்தில் 4 சிக்சர், 3 பவுண்டரியுடன் 40 ரன்னில் ஆட்டமிழந்தார்.

கிறிஸ் கெயில் அடித்த 4 சிக்சர்களுடன் அவர் ஐபிஎல் போட்டிகளில் 302 சிக்சர்களை அடித்துள்ளார். இதன்மூலம் ஐபிஎல் போட்டிகளில் 300 சிக்சர்கள் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றார் அதிரடி மன்னன் கிறிஸ் கெயில்.115 போட்டிகளில் இந்த சாதனையை இவர் படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏபி டி வில்லியர்ஸ் 192 சிக்சர்களுடன் இரண்டாவது இடத்திலும், 185 சிக்சர்களுடன் எம்.எஸ்.டோனி மூன்றாவது இடத்திலும் உள்ளார்.

இந்தியாவில் பிரிமியர் கிரிக்கெட் தொடர் நடக்கிறது. மொகாலியில் நடந்த லீக் போட்டியில் அஷ்வின் தலைமையிலான பஞ்சாப் அணி, ரோகித்தின் மும்பை அணியை எதிர் கொண்டது. ‘டாஸ்’ வென்ற பஞ்சாப் அணி கேப்டன் அஷ்வின் பவுலிங் தேர்வு செய்தார்.

மும்பை அணிக்கு கேப்டன் ரோகித், குயின்டன் ஜோடி ‘சூப்பர்’ துவக்கம் தந்தது. அஷ்வின் வீசிய முதல் ஓவரிலேயே இருவரும் பவுண்டரி அடித்தனர். வில்ஜோயன் வீசிய அடுத்த ஓவரில் இவர் 32 ரன்களில் சிக்கினார். முருகன் அஷ்வின் ‘சுழலில்’ சூர்யகுமார் யாதவ் (11) ஆட்டமிழந்தார்.

கெய்ல் ஆடும்போது நாம் வேடிக்கை மட்டுமே பார்க்க வேண்டும்: கே.எல் ராகுல் 3

ஷமி பந்தை சிக்சருக்கு பறக்கவிட்ட குயின்டன் அரை சதம்(60) கடந்தார்.  முருகன் அஷ்வின் இம்முறை யுவராஜ் சிங்கை (18) வெளியேற்றினார். போலார்டு (7) ஒற்றை இலக்கில் அவுட்டானார். குர்னால் பாண்ட்யா. 10 ரன்களில் திரும்பினார். கடைசி கட்டத்தில் விளாசிய ஹர்திக் பாண்ட்யா 32 ரன்கள் எடுத்தார். மும்பை அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 176 ரன்கள் எடுத்தது. பஞ்சாப் சார்பில் அதிகபட்சமாக ஷமி, வில்ஜோயன், முருகன் அஷ்வின் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

பின் களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு லோகேஷ் ராகுல், கெய்ல் சிறப்பான துவக்கம் தந்தனர். மெக்லீனகன், ஹர்திக் பாண்ட்யா பந்துகளை சிக்சருக்கு அனுப்பிய கெய்ல், 40 ரன்களுக்கு அவுட்டானார். மயங்க் அகர்வால், 43 ரன்கள் எடுத்தார். ராகுல்– மில்லர் ஜோடி கைகோர்த்தது. ஹர்திக் வீசிய 16வது ஓவரில் இருவரும் பவுண்டரி அடித்து உள்ளூர் ரசிகர்களுக்கு விருந்து படைத்தனர். மலிங்கா பந்தை பவுண்டரிக்கு அனுப்பிய ராகுல் அரை சதம் எட்டினார். பஞ்சாப் அணி 18.4 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 177 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ராகுல் (71), மில்லர் (15) அவுட்டாகாமல் இருந்தனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *