அடுத்த ஐபிஎல் சீசனுக்கான கேப்டனை அறிவித்தது கொல்கத்தா அணி! 1

அடுத்த ஐபிஎல் சீசனுக்கான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் இவர் தான் என தெரிவித்துள்ளார் பிரண்டன் மெக்கல்லம்.

ஐபிஎல் 2020ஆம் ஆண்டுக்கான ஏலம் இன்று கொல்கத்தாவில் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் நடைபெற்று வருகிறது. பல வீரர்கள் மிகப்பெரிய தொகையை பெற்று ஆச்சர்யப்படுத்தினர். மேலும் சிலர் விலை போகாமல், ஏமாற்றம் அடைந்தது ரசிகர்களையும் ஏமாற்றியது.

இந்நிலையில், இந்த ஆண்டு ஒருநாள் போட்டிக்கான உலகக்கோப்பையை இங்கிலாந்து அணிக்கு வென்று கொடுத்த ஐயன் மார்கன் கொல்கத்தா அணியால் 5.25 கோடிக்கு எடுக்கப்பட்டார்.

அடுத்த ஐபிஎல் சீசனுக்கான கேப்டனை அறிவித்தது கொல்கத்தா அணி! 2

மேலும், மிகப்பெரிய தொகையான 15.50 கோடி கொடுக்கப்பட்டு ஆஸ்திரேலிய வீரர் பாட் கம்மின்ஸ் எடுக்கப்பட்டார். அதேபோல சென்ற ஆண்டு அதிகத்தொகைக்கு ஏலம் சென்ற விசித்திரமான சுழல்பந்துவீச்சாளர் வருண் சக்கரவர்த்தி 4 கோடிக்கு எடுக்கப்பட்டார்.

இந்நிலையில், கடந்த இரண்டு சீசன்களாக கொல்கத்தா அணியின் கேப்டனாக இருந்து வரும் தினேஷ் கார்த்திக் தலைமையில் அணியால் சிறப்பாக செயல்படமுடியவில்லை என்ற விமர்சனம் எழுந்தது. வீரர்கள் மத்தியில் கருத்து வேறுபாடும் சென்ற சீசன் இருந்தது.

அடுத்த ஐபிஎல் சீசனுக்கான கேப்டனை அறிவித்தது கொல்கத்தா அணி! 3

இதற்கிடையில், மார்கன் அணிக்கு எடுக்கப்பட்டதால், அடுத்த சீசனில் இவர் கேப்டனாக இருக்கலாம் என கருத்துகள் வெளிவந்தது. ஆனால், இதற்க்கு பதில் அளித்துள்ளார் பிரண்டன் மெக்கல்லம்.

பிரண்டன் மெக்கல்லம் கூறுகையில், “எந்தவித விமர்சனத்திற்கும் செவிசாய்க்கவில்லை. தினேஷ் கார்த்திக் திறமை மீது அணி நிர்வாகத்திற்கு முழு நம்பிக்கை இருக்கிறது. அடுத்த சீசனில் அவரே கேப்டனாக நீடிப்பார்.

அடுத்த ஐபிஎல் சீசனுக்கான கேப்டனை அறிவித்தது கொல்கத்தா அணி! 4

மார்கள் அனுபவம் தினேஷ் கார்த்திக்கிற்கு நிறைய உதவும் என்ற நம்பிக்கையும் உள்ளது. அணிக்கு பாட் கம்மின்ஸ் வர இருப்பதால், கூடுதல் பலமே” என்றார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *