தல அஜித் குமாரை யார் எனக் கேட்ட அதே பாலிவுட் தயாரிப்பாளர் தற்போது யுவராஜ்,ரெய்னாவை

கே ஆர் கே எனும்  கமால் ரஷிட் கான். இவர் ஒரு பாலிவுட் நடிகர், தயாரிப்பாளர். சமீபகாலங்களில் அதனைத் தவிர இவருக்கு வேலை என்னவெனில் விமர்சனம் என்ற பெயரில் இலவச விளம்பரம் தேடுவது. ட்விட்டரில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் கமால் கான் எப்போதவாது, யாராவது கிடைப்பாரகளா என காத்துக்கொண்டிருப்பவர்.

நன்றி : நெட்டு டீவி ஃபார் யூ

சமீபத்தில் ஐ.போன் 8 வெளியான போது, தனது மகளுக்கு வாங்கிக் கொடுத்து விட்டேன் எனக்கூற அவரது மகள் உடனடியாக ட்விட்டர் பக்கத்தில் வந்து என்னது இது ஐ.போன் 8 எனக்கு வேண்டாம் எனக்கு ஐ.போன் 10 தான் வேண்டும் என சமூக வலைதளத்திலேயே மூக்குடைத்தார்.

அதற்கு முன்னர் இவர் செய்த காரியம் தெரியுமா, விவேகம் படம் ரிலீஸ் ஆன போது தல அஜித் குமாரை கலாய்க்க நினைத்து தல,தளபதி ரசிகர்களிடம் இவர் வாங்கிக் கட்டியதும் ஒரு பழைய கதை.

 

விமர்சகர் என்ற பெயரில் இவர் செயும் செய்கைக்கு நம்ம ஊர் tamilcinemariviews ‘பாண்டா பிரசாந்தே’ பரவாயில்லை எனத் தோன்றும். பிரசாந்தாவது ஒரு படத்திற்கு ஒரு முறை தான் பப்லிசிட்டி தேடினார், ஆனால் இந்த கமால் கான் ஒவ்வொரு முறையும் பிரபலமானவர்கள் எதாவது செய்தால் உடனடியாக தூக்கிட்டு வந்துவிடுவார்.

தற்போது அதே போல் தான் ஒரு சமபவத்தில் ஈடுபட்டுள்ளார் கமால் கான். நியூசிலாந்து தொடருக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அந்த அணியில் யுவராஜ் சிங்க் மற்றும் சுரேஷ் ரெய்னா இல்லை என்பதை தெரிந்து கொண்ட கே.ஆர்.கே இந்த வாய்ப்பையும் பப்லிசிட்டி தேட பயன்படுத்திக் கொண்டு னல்ல வேலை செய்தீர்கள் விராட் எனக் கூறி யுவ்ராஜ் மற்றும் சுரேஷ் ரெய்னா ரசிகர்களிடம் நன்றாக வாங்கிக் கட்டியுள்ளார்.

ஒரு வழியாக யுவராஜ் சிங் மற்றும் சுரேஷ் ரெய்னாவை அணியை விட்டு நிரந்தரமாக ஒதுக்கி வைத்து விட்டார். ஒன்னும் பிரச்சனை இல்லை. யுவராஜ் மற்றும் ரெய்னா, இப்போது ஒழுங்காக உக்கார்ந்து கமென்ட்ரி செய்யுங்கள்.

என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

இதனால் கடுப்பான ரெய்னா மற்றும் யுவராஜ் சிங் ரசிகர்கள் அவரது ட்விட்டர் பக்கத்தில் அவரை வெளுத்து வாங்க துவங்கியுள்ளனர்.

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் வரும் 22 ஆம் தேதி துவங்குகிறது. இந்த 3 போட்டிகள் கொண்ட தொடரில் கலந்து கொள்ளும் இந்திய அணி நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. அந்த அணியில் பெரிதும் எதிர் பார்க்கப்பட்ட யுவராஜ் சிங் மற்றும் சுரேஷ் ரெய்னா ஆகியோர் இடம் பெறவில்லை.

இவர்கள் இருவரும் யோ-யோ உடல் தகுதித் தேர்வில் தோல்வி அடைந்ததால் அணியில் சேர்க்கப்டவில்லை எனபது குறிப்பிடத்தக்கது. இதற்க்காக அவர்களது ரசிகர்கள் இந்திய கிரிக்கெட் வாரியத்தை சமூக வலை தளங்களில் சாடி வருகின்றனர்.

மேலும், இந்த தொடரில் சுழல் இரட்டையர்களான ரவிந்திர ஜடேஜா மற்றும் ரவி அஷ்வின் ஆகியோர் பெயரும் இடம் பெறவில்லை. அவர்களிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது என கூறினர். ஆனால், இருவரும் ரஞ்சிக் கோப்பைத் தொடரில் ஆடிவருகின்றனர் எனப்து குறிப்பிடத்தக்கது.

 

இந்திய அணி : விராட் கோலி (கேப்டன்), ரோகித் சர்மா, சிகர் தவான், அஜின்கியா ரகானே, கேதார் ஜாதவ், தினேஷ் கார்த்திக், மகேந்திர சிங் தோனி, ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், யுஜவேந்திர சகால், ஜஸ்பிரிட் பும்ரா, புவனேஷ்வர் குமார், ஷ்ரதுல் தகூர்

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடரில் பங்கேற்கும் எஞ்சிய 6 வீரர்களின் பெயரையும், டி 20 தொடருக்கான அணியையும் நியூஸிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

இரு வகையிளான போட்டிகளுக்கான நியூசிலாந்து அணி விவரம்:

ஒருநாள் போட்டிக்கான அணி: கேன் வில்லியம்சன் (கேப்டன்), டோட் அஸ்லே, டிரென்ட் போல்ட், காலின் டி கிராண்ட் ஹோம், மார்ட்டின் கப்தில், மேட் ஹென்றி, டாம் லதாம், ஹென்றி நிக்கோல்ஸ், ஆடம் மில்னே, காலின் முன்ரோ, கிளென் பிலிப்ஸ், மிட்செல் சான்டர், டிம் சவுத்தி, ராஸ் டெய்லர், ஜார்த் வோர்க்கர்.

டி 20 தொடருக்கான அணி: வில்லியம்சன் (கேப்டன்), டிரென்ட் போல்ட், டாம் புரூஸ், டி கிராண்ட்ஹோம், மார்ட்டின் கப்தில், மேட் ஹென்றி, டாம் லதாம், ஹென்றி நிக்கோல்ஸ், ஆடம் மில்னே, காலின் முன்ரோ, கிளென் பிலிப்ஸ், மிட்செல் சான்டர், இஸ் சோதி, டிம் சவுத்தி.

Editor:

This website uses cookies.