விராட் கோலியின் அணியில் இனி இந்த வீரர்களுக்கெல்லாம் இடம் கிடைக்காது: 3 வீரர்களுக்கு மறைமுகமாக எச்சரிக்கை கொடுத்த முன்னாள் வீரர் சிவராமக்கிருஷ்னன் 1

கேப்டன்சி வரவர எதிர்மறையாகச் செல்கிறது, ஸ்பின்னர்களுக்கு எதிராக உள்ளது என்று முன்னாள் இந்திய ஸ்பின்னரும் தமிழக வீரருமான எல்.சிவராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

யூடியூப் சேனலில் தமிழகத்தைச் சேர்ந்த இன்னொரு இந்திய அணி வீரர் டபிள்யு.வி.ராமனிடம் அவர் உரையாற்றும்போது கூறியதாவது:

ஸ்பின்னர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்றே நான் கருதுகிறேன். இப்போது உள்ள ஸ்பின்னர்கள் முயற்சித்து வருகிறார்கள், ஆனால் இவர்களுக்கு பிறகு ஸ்பின் வீசும் கலை அழிந்து விடும். இந்தியாவில் நல்ல ஸ்பின்னர்கள் கிடைப்பார்கள் என்று நான் கருதவில்லை.விராட் கோலியின் அணியில் இனி இந்த வீரர்களுக்கெல்லாம் இடம் கிடைக்காது: 3 வீரர்களுக்கு மறைமுகமாக எச்சரிக்கை கொடுத்த முன்னாள் வீரர் சிவராமக்கிருஷ்னன் 2

கேப்டன்சி இப்பொதெல்லாம் ரன் கொடுக்கக் கூடாது, டைட்டாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறது. ஸ்பின்னர்களுக்கு அருகில் நெருக்கமாக களவியூகம் அமைப்பதில்லை, தூரத்தில் நிறுத்தி மட்டையாளர்கள் செய்யும் தவறை நம்பியிருக்கிறது. இதனால் ஸ்லிப், பார்வர்ட் ஷாட் லெக் இல்லை.

நான் சுனில் கவாஸ்கர் தலைமையில் நன்றாக வீசியதாகக் கருதுகிறேன். ஆனால் கபில்தேவ் தலைமையில் அல்ல. கபில் உள்ளுணர்வான கேப்டன், கவாஸ்கர் திட்டமிடுபவர். நம்மிடம் என்ன எதிர்பார்க்கிறார் என்பதை தெளிவுபடுத்தி விடுவார் கவாஸ்கர்.விராட் கோலியின் அணியில் இனி இந்த வீரர்களுக்கெல்லாம் இடம் கிடைக்காது: 3 வீரர்களுக்கு மறைமுகமாக எச்சரிக்கை கொடுத்த முன்னாள் வீரர் சிவராமக்கிருஷ்னன் 3

ஸ்பின்னர்களின் வளர்ச்சியில் கேப்டன்சி பெரும்பங்கு வகிப்பதாக நான் கருதுகிறேன் இவ்வாறு கூறினார் எல்.சிவராம கிருஷ்ணன்.

 

இவர் கூறுவதை பார்த்தால் தற்போது இந்திய அணியில் சுழற்பந்து வீச்சை மட்டுமே நம்பி காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கும் குல்தீப் யாதவ், யுஜவேந்திர சாஹல், ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோருக்கு இன்னும் சில ஆண்டுகளில் பிரச்சனை ஏற்படும் என்று தெரிகிறது. விராட் கோலி ஆக்ரோசமாக ஆடுவதற்காக எப்போதும் வேகப்பந்து வீச்சாளர்களை நம்புகிறார்.

குறிப்பாக தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் நான்கு வேகப்பந்து வீச்சாளர்களை வைத்து அடிக்கிறார். ஐந்தாவதாக பேட்டிங் பிடிக்கத் தெரிந்த ரவீந்திர ஜடேஜாவை களமிறக்குகுகிறார். அவரால் சுழற் பந்து வீச முடியும் இதன் காரணமாக இந்த மூவருக்கும் பிரச்சினை இருக்கும் என்று தெரிகிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *