கல்கத்தாவில் பயிற்சியில் சக வீரர்களுடன் ஈடுபட்டிருந்த பயிற்சி வீரர் தெபபிரட்டா மின்னல் தாக்கி உயிரிழந்தார்.
21 வயதாகும் தெபபிரட்டா கல்லூரியில் பி.காம் இறுதி ஆண்டு படித்து வந்தார். இவரின் சொந்த ஊர் ஹூக்ளி மாவட்டத்தில் உள்ள சேரம்பூர். தினமும் பயிற்சிக்காக நண்பர்களுடன் பயணித்து கொல்கத்தாவில் உள்ள விவேகானந்தா பார்க் மைதானத்தில் வந்து பயிற்சி செய்வர்.
அப்படி ஒருநாள் பயிற்சியில் ஈடுபடும் பொழுது, இடி மின்னல் அடிக்க மற்ற வீரர்கள் மைதான அறையில் ஒதுங்கி விட்டனர். இவரும் மற்றும் 3 நபர்கள் மட்டும் பயிற்சியை தொடர்ந்தனர். அப்பொழுது திடீரென மின்னல் தாக்கி கீழே விழுந்தார்.
இது பற்றி உடன் விளையாடிய நண்பர்கள் கூறுகையில், நன்றாக விளையாடிக்கொண்டு இருந்தோம், அப்பொழுது மின்னல் தாக்கி தலை சுற்றி தெபபிரட்டா கீழே விழுந்தார், உடல் முழுதும் கருகி மயக்கம் அடைந்தார் என தெரிவித்தார்.
அதே சமயம், கிரௌண்ட்மென் 50 மீட்டர் இடைவெளியில் தான் இருந்திருக்கிறார். அவர் மதிய உணவுக்கு சென்று இருக்கையில் இந்த சம்பவம் நிகழ்ந்து இருக்கிறது. அப்பொழுது மின்னல் தாக்கி அவரது அறையில் அதிர்வு ஏற்பட்டதாக அவர் கூறினார்.
ஒரு நிமிடம் என்ன நிகழ்ந்தது என யாருக்கும் புரியவில்லை, அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். அதன் பின்பு தான் தெபபிரட்டா உடலை அறைக்கு தூக்கி சென்று முதலுதவி செய்துள்ளனர். நெஞ்சு பகுதியில் நன்கு அழுத்தி, வாய் வழியாக மூச்சு ஏற்றி அவரை சரி செய்ய முயர்சி செய்துள்ளனர்.
அவை எதுவும் சேய் வராததால், காரி அருகில் உள்ள மருத்துவமனைக்கு எடுத்து சென்றுள்ளனர். உடலை பரிசோதித்த மருத்துவர், வரும் வழியிலேயே உயிர் பிரிந்ததாக கூறியுள்ளார்.
“தெபபிரட்டா வாழ்நாள் கனவே நல்ல கிரிக்கெட் வீரர் ஆக வேண்டும், இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்பது தான், அவரது பெற்றோர்கள்
தெபபிரட்டா கிரிக்கெட் விளையாடுவதை விரும்பவில்லை அதனால் பயிர்ச்சியில் கூட சேர்க்கவில்லை. கல்லூரி இறுதி ஆண்டு படிக்கையில் தான் போராடி பயிர்ச்சியில் சேர்ந்தார்”, பஜ்ரதீபன், தெபபிரட்டா உடன் தினமும் பயிற்சிக்கு செல்லும் நண்பர்.
சில மணி நேரங்கள் கழித்து தான் தெபபிரட்டாவின் பெற்றோர்கள் மருத்துவமனைக்கு வந்தனர். அவரின் அம்மா மிகவும் வருத்தத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் மயங்கி விழுந்துள்ளார். தெபபிரட்டாவின் தந்தை சில மாதங்களுக்கு முன்பு தான் தனியார் நிறுவனத்தில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார்.
மேலும் ஒரு நண்பர், எப்போதும் நாங்கள் மின்னல் இடி போது தான் பயிற்சி செய்வோம், இதுவரை ஐப்பசி நிகழ்ததே இல்லை இதுவே முதல் முறை என கூறினார்.