நியூஸிலாந்து அணியை சேர்ந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் லூக் ரொன்சி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து உள்ளார்.
36 வயதான லூக் ரொன்சி 2008இல் ஆஸ்திரேலியாவில் தன் கிரிக்கெட் வாழ்க்கையை துடங்கினார்.தற்போது தனக்கென ஒரு இடத்தை பிடித்து விட்டு கிரிக்கெட் வாழ்க்கையில் இருந்து ஓய்வு அழித்து உள்ளார். கடைசியாக ஏப்ரல் 2013 இல் லண்டனின் இங்கிலாந்துக்கு எதிராக தனது புதிய நியூசிலாந்த அறிமுகத்தை ரோன்சி துவங்கினார், ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய இரண்டு நாட்டிலும் விளையாடிய முதல் வீரராகவும் ஆனார் லூக் ரொன்சி.
2008 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளுக்கு இடையே ஆஸ்திரேலியாவிற்கு நான்கு ஒரு நாள் சர்வதேச மற்றும் மூன்று டி 20 சர்வதேச போட்டிகளிலும் விளையாடிய பின்னர், ரோஞ்சி 81 ஒருநாள் போட்டிகளிலும், 29 டி 20 போட்டிகளிலும் , மற்றும் 4 டெஸ்ட் போட்டிகளிலும் நியூசிலாந்து அணிக்காக விளையாடி உள்ளார்.
கடுமையாக பந்துகளை அடித்து ஆடும் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் நியூசிலாந்து அணிகாக ஒருங்கிணைது ஒரு முக்கிய பகுதியாக இருந்து தன் அணியை 2015இல் இறுதி போட்டிக்கு அழைத்து சென்றார்.
லூக் ரொன்சி தனது வாழ்க்கையில் மறக்க முடியாத நினைவாய் இலங்கை அணிக்கு எதிராக 99 பந்துகளில் 170 ரன்கள் அடித்து ஆடம் இழக்காமல் இருந்தார் இதுவே அவரத்தின் சிறந்த போட்டியாகும்.
நியூசிலாந்தில் தனது கிரிக்கெட் வாழ்க்கையைப் பற்றி பேசிய ரொஞ்சி, “இது ஒரு கனவு தான்.”
“நியூசிலாந்தின் கிரிக்கெட்டில் ஒரு சிறந்த நேரத்தை நான் கருதவில்லை. 2015 உலக கோப்பை பிரச்சாரத்திலிருந்து, அந்த நேரத்தில் வெளிநாட்டு சுற்றுப்பயணங்கள் மற்றும் சில அற்புதமான விளையாட்டு தொடர் மூலம், அது எனக்கு ஒரு உண்மையான சிறப்பம்சமாக இருந்தது.கிரிக்கெட் நீண்ட காலத்திற்கு உங்களை வீட்டிலிருந்து அகற்றிவிட்டு, என் குடும்பம் மிகவும் புரிகிறது”,என்று அவர் கூறினார்.
அவரின் இழப்பு நியூஸிலாந்து அணிக்கு ஒரு இழப்பாக இருக்கும் என்று அந்த அணியின் பயிற்சியாளர் கூறினார்.