நான் திரும்பி வருவ – மனிஷ் பாண்டே

பக்க முறிவு காரணமாக சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியில் இடம் பெற்றிருந்த மனிஷ் பாண்டே, சாம்பியன்ஸ் ட்ராபியில் இருந்து விலகினார். ஆனால், வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் நான் விளையாடுவது தான் என்னுடைய அடுத்த இலக்கு என மனிஷ் பாண்டே கூறியுள்ளார்.

இந்தியன் பிரீமியர் லீக் 10 வது தொடரில் அவர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடும் போது அவருக்கு காயம் ஏற்பட்டது. ஆனால், அதற்கு முன் அவர் நல்ல பார்மில் இருந்தார். முதல் 13 போட்டிகளில் விளையாடிய அவர் 396 ரன் அடித்திருந்தார்.

இந்த முக்கிய போட்டிகளில் விளையாடாமல் போவது வருத்தம் அளிக்கிறது என கூறியிருந்தார்.

“சாம்பியன்ஸ் டிராபியைப் போன்ற ஒரு போட்டியை இழக்க நேரிடும் என்பது வருத்தம் அளிக்கிறது. காயங்கள் என்பது விளையாட்டின் ஒரு பகுதி தான். நான் ஓரிரு வாரத்தில் பயிற்சியில் ஈடு பட தொடங்கிடுவேன்,” என பாண்டே கூறினார்.

“வெஸ்ட் இண்டீஸ் தொடர் தொடங்குவதற்கு முன் என் உடல்நலம் சரியாக வேண்டும் என்பது தான் என்னுடைய அடுத்த இலக்கு. முழுமையாக குணமடைய ஓரிரு வாரங்கள் தேவை படுகிறது,” என மேலும் பாண்டியா கூறினார்.

காயம் காரணத்தால் விலகிய மனிஷ் பாண்டேவுக்கு பதிலாக தமிழக வீரரான தினேஷ் கார்த்திகை அணியில் சேர்க்க பட்டார்கள். வங்கதேசத்துக்கு எதிரான பயிற்சி போட்டியில் 94 ரன் அடித்து ரிட்டயர்டு-ஹர்ட் ஆகி பெவிலியன் சென்றார்.

இந்த சாம்பியன்ஸ் டிராபியில் ஜூன் 4ஆம் தேதி அன்று பாகிஸ்தானுடன் இந்தியா மோதுகிறது. இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடர் முடிந்ததும், வெஸ்ட் இண்டீஸுடன் 5 ஒருநாள் மற்றும் ஒரு டி20 தொடர் இந்தியா விளையாட உள்ளது. முதல் ஒருநாள் போட்டி ஜூன் 23 ஆம் தேதி தொடங்குகிறது.

Silambarasan Kv: Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

This website uses cookies.