கடந்த துலீப் டிராபி தொடரில் விளையாடாத இந்திய வீரர் மனோஜ் திவாரி, இந்த தொடரில் சுரேஷ் ரெய்னா தலைமையிலான இந்தியா ப்ளூ அணிக்காக விளையாட உள்ளார்.
இந்திய அணிக்காக விளையாடிய பெங்கால் வீரர் மனோஜ் திவாரி, மீண்டும் இந்திய அணியில் இடம் பெற முயற்சி செய்து வருகிறார். கடின பயிற்சி செய்து மீண்டும் இந்திய அணியில் இடம் பெற போவதாக மனோஜ் திவாரி தெரிவித்தார். அந்த அறிய வாய்ப்பை அவர் பயன்படுத்தி கொண்டு, இந்த வருட துலீப் டிராபியில் சிறப்பாக விளையாடவேண்டும்.
கடந்த துலீப் டிராபி தொடரில் விளையாடாத இந்திய வீரர் மனோஜ் திவாரி, இந்த தொடரில் சுரேஷ் ரெய்னா தலைமையிலான இந்தியா ப்ளூ அணிக்காக விளையாட உள்ளார். இந்தியா ப்ளூவின் முதல் போட்டி செப்டம்பர் 13ஆம் தேதி தொடங்கவுள்ளது.
“எனக்கு கிடைத்த மிக பெரிய வாய்ப்பு இது. நான் நல்ல பார்மில் இருக்கிறேன். இந்த தொடரில் சிறப்பாக விளையாட, பிங்க் பந்தில் விளையாடுவதை நிறுத்திவிட்டேன்,” என மனோஜ் திவாரி தெரிவித்தார்.
பெங்கால் வீரர் மனோஜ் திவாரி கடைசியாக 2015-இல் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக விளையாடினார், ஆனால் சொல்லிக்கொள்ளும் படி விளையாடாததால், அவருக்கு மீண்டும் அணியில் இடம் கிடைக்கவில்லை.
“காலையில் இருந்து மாலை வரை கடினமாக பயிற்சி செய்கிறேன். இந்த வாய்ப்பு பயன் படுத்தி கொள்வேன் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது. இந்த முறை நல்ல பார்மில் இருக்கிறேன்,” என அவர் மேலும் கூறினார்.
காளிகாட் கிளுப்புடன் ஏழு வருட ஒப்பந்தம் முடிவடைந்த நிலையில் மோகன் பகனுடன் ஒப்பந்தம் செய்துள்ளார்.
“இந்த முறை மோகன் பகனுக்காக கோப்பையை வென்று மீண்டும் இந்திய அணியில் இடம் பிடிப்பேன். கோப்பையை வெல்வது தான் என்னுடைய குறிக்கோள். அது கடினம் தான், ஆனால் அதை செய்தாக வேண்டும்,” என கூறினார்.
“மோகன் பகன் இதுவரை கோப்பையை வென்றதில்லை. இந்த முறை கோப்பையை வெல்வது தான் என்னுடைய குறிக்கோள். இந்த தொடரின் அதிக ரன் அடித்தவராக இருக்க வேண்டும் ஆசை படுகிறேன்,” என மேலும் கூறினார்.
“பிரக்யான் ஓஜா அணியுடன் சேருவாரா என்று தெரியவில்லை. எந்த நிலைமையிலும் சிறப்பாக விளையாடி வெற்றி பெறுவோம் என்று நம்பிக்கை உள்ளது. அவர் வரவில்லை என்றால், அவருக்கு பதில் விளையாட பல சிறந்த வீரர்கள் உள்ளார்கள்,” என திவாரி தெரிவித்தார்.