மகளிர் உலக கிரிக்கெட் போட்டி 2017 : உலக சாதனை படைத்த மித்தாலி ராஜ் 1

தற்போது இங்கிலாந்தில் மகளிர் உலக கோப்பை போட்டிகள் நடந்து வருகிறது இதில் நேற்று இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகள் மோதியது.இந்த போட்டியில் இந்தியா இங்கிலாந்து அணியை 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதில் இந்திய அணியின் மித்தாலி ராஜ் தொடர்ந்து 7 போட்டிகளில் அரைசதம் அடித்து உலக சாதனை படைத்து உள்ளார்.

இங்கிலாந்து மற்றும் வேல்சில் நடந்து வரும் 11வது மகளிர் உலக கிரிக்கெட் போட்டிகள் நடந்து கொண்டு இருக்கிறது (50 ஓவர்) இந்த போட்டிகள் நேற்று துவங்கியது . ‘நடப்பு சாம்பியன்’ ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா, இங்கிலாந்து, பாகிஸ்தான் உட்பட மொத்தம் 8 அணிகள், லீக் போட்டிகளில் மோதுகின்றன. நேற்று டெர்பியில் நடந்த போட்டியில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் நைட் ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.

மகளிர் உலக கிரிக்கெட் போட்டி 2017 : உலக சாதனை படைத்த மித்தாலி ராஜ் 2

இதனை தொடர்ந்து இந்திய அணி முதலில் களம் இறங்கியது இந்திய அணிக்கு பூணம் ராத், ஸ்மிரிதி மந்தனா ஜோடி சூப்பர் துவக்கம் கொடுத்தது. ஒரு பக்கம் பூணம் ராத் நிதான ஆட்டத்தை வௌிப்படுத்த, மறுபக்கம் அதிரடியாக ரன்கள் குவித்தார் மந்தனா. பிரன்ட் ஓவரில் நான்கு பவுண்டரிகள் அடித்த இவர், சிவர் பந்தை சிக்சருக்கு விரட்டினார். ஜென்னி கன் பந்தில் பவுண்டரி அடித்த மந்தனா, ஒருநாள் அரங்கில் 6வது அரைசதம் அடித்தார். இந்த ஜோடியில் அசத்தல் ரன் குவிப்பு காரணமாக இந்திய அணி 20.4வது ஓவரில் 100 ரன்களை எட்டியது. ஸ்மிருதிக்கு நல்ல ‘கம்பெனி’ கொடுத்த பூணம் ராத், 20, 21 ரன்கள் எடுத்த போது, தப்பிப்பிழைத்தார்.

வாய்ப்பை பயன்படுத்திய இவர், தன் பங்கிற்கு, 9வது அரைசதம் கடந்தார். முதல் விக்கெட்டுக்கு 144 ரன்கள் சேர்த்த போது, 72 பந்துகளில் 90 ரன் எடுத்த மந்தனா அவுட்டானார். பின் வந்த கேப்டன் மிதாலி ராஜ், வேகமாக ரன்கள் சேர்த்தார். இந்நிலையில் மந்தமான ஆட்டத்தை வௌிப்படுத்திய பூணம் ராத், 86 ரன்னுக்கு (134 பந்து) வெளியேறினார். மிதாலி ராஜ் ஒரு நாள் அரங்கில் 47வது அரைசதம் எட்டினார்.

மகளிர் உலக கிரிக்கெட் போட்டி 2017 : உலக சாதனை படைத்த மித்தாலி ராஜ் 3

அதை தவிர சர்வதேச ஒருநாள் போட்டியில் தொடர்ந்து 7 அரைசதம் அடித்து உலக சாதனை படைத்தார். இதற்கு முன் லிண்ட்சே (ஆஸ்திரேலியா), பெர்ரி (ஆஸ்திரேலியா), சார்லொட்டி எட்வர்ட்ஸ் (இங்கிலாந்து) தொடர்ந்து 6 அரைசதம் அடித்து இருந்தனர். கடைசியில் இவர் 71 ரன்னுக்கு அவுட்டாக, இந்திய அணி 50 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 281 ரன்கள் குவித்தது. ஹர்மன்பிரீத் கவுர் (24) அவுட்டாகாமல் இருந்தார்.

282 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களம் இறங்கிய இங்கிலாந்து அணியில் பியுமண்ட் (14), சாரா டெய்லர் (22) ஜோடி சுமாரான துவக்கம் கொடுத்தார்கள். நடாலியே 18 ரன்களில் அவுட் ஆனார் . கேப்டன் ஹெதர் நைட் (46), ஹர்மன்பிரீத் கவுரின் ரன் அவுட்டானார்.

மகளிர் உலக கிரிக்கெட் போட்டி 2017 : உலக சாதனை படைத்த மித்தாலி ராஜ் 4

வயாத் 9 ரன்களும் , பிரன்ட் 24 ரன்களும், பிரான் வில்சன் 81 ரன்கள் எடுத்து, ரன் அவுட்டானார். கடைசியில் பிரன்ட் 24 ரன்களும், ஹஜல் 4 ரன்களும் எடுத்து அவுட்டாக, இங்கிலாந்து அணி 47.3 ஓவரில் 246 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.இதனால் இந்திய அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சிறந்த வீராங்கனையாக இந்தியாவின் மந்தனா தேர்வு செய்யப்பட்டார்.

ஒருநாள் கிரிக்கெட்டில் கடந்த 2012க்குப் பின் இந்திய பெண்கள் அணி, இங்கிலாந்துக்கு எதிராக முதல் வெற்றியை பெற்றது.

மகளிர் உலக கிரிக்கெட் போட்டி 2017 : உலக சாதனை படைத்த மித்தாலி ராஜ் 5

பெண்கள் கிரிக்கெட்டில் முதன் முறையாக, நேற்று இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதிய போட்டியில் அம்பயர் தீர்ப்பு மறுபரிசீலனை (‘டி.ஆர்.எஸ்.,) முறை பயன்படுத்தப்பட்டது. இங்கிலாந்தின் நடாலியேவுக்கு ‘அவுட்’ கேட்டு இந்திய வீராங்கனைகள் முறையிட, அம்பயர் மறுத்தார். இதனால், இந்திய அணி கேப்டன் மிதாலி ராஜ், ‘டி.ஆர்.எஸ்.,’ முறையில் அப்பீல் செய்ய, தீர்ப்பு இந்தியாவுக்கு சாதகமாக அமைந்தது.

இதனை தொடர்ந்து ஆடவர் கிரிக்கெட் போட்டியில் இன்றய போட்டியில் இந்தியா மற்றும் மேற்கு இந்திய தீவுகள் அணி மோதுகிறது முதல் போட்டி மழையால் பாதிக்க பட்டு ஆடம் பாதியிலேயே நிறுத்த பட்டது.

Vignesh N

Cricket Lover | Movie Lover | love to write articles

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *