இந்திய அணிக்கு கிடைத்த தலைசிறந்த கேப்டன்களுள் ஒருவர் தான் மகேந்திர சிங் தோனி, அவர் அவருடைய ஒருநாள் கிரிக்கெட் வாழ்க்கையில் மீண்டும் ஒரு சாதனையை படைத்துள்ளார். நியூஸிலானதுக்கு எதிரான போட்டியின் போது இந்தியாவில் சர்வதேச கிரிக்கெட்டில் 200 கேட்ச் பிடித்த முதல் விக்கெட்-கீப்பர் என்ற சாதனையை படைத்தார் மகேந்திர சிங் தோனி.
நியூஸிலாந்துடன் விளையாடிய இரண்டாவது ஒருநாள் போட்டியின் போது 2வது ஓவர் வீசிய பந்து, நியூஸிலாந்து வீரர் மார்ட்டின் குப்திலின் பேட் முனையில் பட்டு சென்ற பந்தை, அசால்டாக பிடித்து இந்த சாதனையாக தன்வசப்படுத்தினார் மகேந்திர சிங் தோனி.
இந்த சாதனையை செய்த மூன்றாவது விக்கெட்-கீப்பர் தோனி தான். இவர்களுக்கு முன்னர் இலங்கை அணியின் முன்னாள் விக்கெட்-கீப்பர் குமார் சங்ககரா மற்றும் இங்கிலாந்து அணியின் விக்கெட் கீப்பர் அலெக் ஸ்டீவர்ட் ஆகியோர் அவர்களின் நாட்டில் விக்கெட்-கீப்பராக 200 கேட்ச் பிடித்திருக்கிறார்கள்.
அதிக கேட்ச் பிடித்த விக்கெட்-கீப்பர்கள் பட்டியலில் தோனிக்கு நான்காவது இடம். இந்த பட்டியலில் ஆடம் கில்கிறிஸ்ட் (417), மார்க் பவுச்சர் (402) மற்றும் குமார் சங்ககரா (383) ஆகியோர் தோனிக்கு முன்னே உள்ளார்கள்.
அந்த போட்டியின் போது தோனி இன்னொரு கேட்சும் பிடித்தார். இந்திய அணியின் ஹர்டிக் பாண்டியா வீசிய பந்து ராஸ் டெய்லரின் பேட் முனையில் பட்டு தோனியின் கைக்கு சென்றது. அந்த போட்டியில் அற்புதமாக பந்து வீசிய இந்திய பவுலர்கள், நியூஸிலாந்து அணியை 230 ரன்னுக்கு நிறுத்திவிட்டார்கள்.
அதன் பிறகு இந்த இலக்கை துரத்திய இந்திய அணி ஆரம்பத்திலேயே ரோகித் ஷர்மாவின் விக்கெட்டை பறிகொடுத்தது. அதற்கு அடுத்து வந்த விராட் கோலி 29 ரன்னில் அவுட் ஆனார். ஆனால், ஷிகர் தவான் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோர் சிறப்பாக விளையாடி அரைசதம் அடிக்க இந்திய அணி 6-விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
முதல் இரண்டு போட்டியில் இரண்டு அணிகளுமே தலா ஒரு முறை வெற்றி பெற்றுள்ளதால், மூன்றாவது ஒருநாள் போட்டி விறுவிறுப்பாக இருக்கும். இந்தியா – நியூஸிலாந்து அணிக்கு இடையிலேயான மூன்றாவது ஒருநாள் போட்டி அக்டோபர் 29ஆம் தேதி கான்பூர் மைதானத்தில் நடைபெறவுள்ளது.