இங்கிலாந்திற்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி ஈடுபட்டுள்ள நிலையில், தோனி தற்போதுள்ள நேரத்தை தனக்கென செலவழித்து வருகிறார் . தனது குடும்பத்துடன் சமீபத்தில், பாலிவுட் நடிகர்களான ஆய்ஷ் ஷர்மா மற்றும் வார்னா ஹுசைன் ஆகியோரை அவரது வீட்டிற்கு அழைத்து விருந்தளித்தார்.
அக்டோபர் 5 ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் ‘லவேரத்ரி’ படத்தில் இருவரும் பெரிய திரையில் அறிமுகம் ஆக இருக்கிறார்கள். இப்படத்தின் இயக்குனர் அபிராஜ் மினவால் ஆவார்.
ஆயுஷ் பாலிவுட் சூப்பர்ஸ்டார் சல்மான்கானின் மச்சான் ஆவார் மற்றும் வார்னா இந்த துறைக்கு முற்றிலும் புதியவராக உள்ளார். இந்த படத்தின் விளம்பரப் பயணத்தில் அவர்கள் சமீபத்தில் கொல்கத்தாவில் உள்ளனர், அதன்பிறகு தற்போது ராஞ்சியில் உள்ளனர்.
டைம்ஸ் ஆப் இந்தியாவின் கூற்றுப்படி, தோனி படக்குழுவை விருந்துக்கு தனது வீட்டிற்கு விசேடமாக அழைத்திருந்தார். ஆயுஷ் தோனியை மிகவும் பாராட்டிவிட்டு, அவரை மிகவும் அன்பாக பழகக்கூடியவர் எனக் குறிப்பிட்டார். “ஒரு பெரிய கிரிக்கெட் நட்சத்திரமாக இருந்தபோதிலும், தோனி தாழ்வாகவும், பணிவாகவும் உள்ளார்,” என்று அவர் கூறினார்.குறிப்பாக, முன்னாள் இந்திய கேப்டனையும் படம் வெளியீட்டு நாளன்று பார்க்க வென்றும் என படக்குழு வற்புறுத்தியுள்ளது.
தோனிக்கு அடுத்தது என்ன?
ஆசிய கோப்பை தொடர் செப்டம்பர் 15 ம் தேதி தொடங்குகிறது. இங்கிலாந்திற்கு எதிரான ஒருநாள் தொடரில் அவர் விமர்சிக்கப்பட்டபின், தனது மோஜோவை திரும்பப் பெறுவார் எனவும் எதிர்பார்க்கப்படுத்திகிறது.
300+ இலக்கை துரத்துவது குறித்து அவர் பெரிதும் விமர்சனத்திற்கும் கிண்டலுக்கும் ஆளானார். ஜோ ரூட் தனது இரண்டாவது தொடர்ச்சியான சதம் அடித்து இறுதி போட்டியில் இங்கிலாந்தை வெற்றிபெற செய்து தொடரை கைப்பற்றவும் உதவியது.