உலகின் தலைசிறந்த டி20 அணி இது தான் : மைக்கேல் வாகன் புகழாரம் 1

உலகின் தலைசிறந்த டி20 அணி இது தான் : மைக்கேல் வாகன் புகழாரம்

ஐபிஎல் தொடர் ஆரம்பத்திலிருந்து மும்பை அணி அவ்வளவு சிறப்பாக விளையாடியது கிடையாது. 2010 ஆம் ஆண்டு முதல் முறையாக இறுதிப் போட்டி வரை முன்னேறியது. அதன் பின்னர் இரண்டு ஆண்டுகள் மிக மோசமாக விளையாடியது. 2013ம் ஆண்டு ரிக்கி பாண்டிங் தலைமையில் மும்பை அணி ஆரம்பத்தில் சொதப்பியது, ஆனால் தொடரின் பாதியில் ரிக்கி பாண்டிங் தனது தலைமைப் பொறுப்பை ரோகித் சர்மா இடம் ஒப்படைத்தார்.

உலகின் தலைசிறந்த டி20 அணி இது தான் : மைக்கேல் வாகன் புகழாரம் 2

அதன் பின்னர் ரோகித் சர்மா மிக சிறப்பாக அணியை வழிநடத்தி 2013ம் ஆண்டு மும்பை அணியை முதல் முறையாக வெற்றி பெற வைத்தார். அன்று தொடங்கி சென்ற ஆண்டுவரை மொத்தமாக ஐந்து முறை ஐபிஎல் தொடரில் மும்பை அணி கைப்பற்றி மிகவும் வெற்றிகரமான அணியாக தற்போது திகழ்கிறது.

மும்பை இந்தியன்ஸ் அணியை பற்றி தற்பொழுது இங்கிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் மைக்கேல் வாகன் தனது கருத்துக்களை தற்போது பகிர்ந்துள்ளார்.

ரோகித் சர்மா தலைமையில் மும்பை அணி தான் எப்போதும் நம்பர் ஒன்

இதுபற்றி அவர் கூறுகையில், ஐபிஎல் தொடரில் மும்பை அணி எப்பொழுதும் மிக சிறப்பாக செயல்படும். குறிப்பாக அந்த அணியின் தலைவராக சர்மா மிக சிறப்பாக அந்த அணியை வழிநடத்தி பல வெற்றிகளை பெற வைத்திருக்கிறார். கடந்த இரண்டு ஆண்டுகளில் அந்த அணி மிக சிறப்பாக செயல்பட்டு தொடர்ச்சியாக இரண்டு பட்டங்களை வாங்கி இருக்கிறது.

இந்த ஆண்டு ஆரம்பத்தில் சற்று தடுமாறினாலும் அதன் பின்னர் நிதானித்து தற்பொழுது நான்காவது இடத்தில் இருக்கிறது. இந்த ஆண்டு துவக்கத்தில் அதிரடி வீரர்கள் சூர்யா குமார் யாதவ், இஷாந்த் கிஷன் மற்றும் டீ காக் ஆகியோர் சிறப்பாக செயல்படவில்லை அதன் காரணமாகவே ஆரம்பத்தில் அந்த அணி சற்று தடுமாறியது. ஆனால் அதன் பின்னர் அந்த அணையை மிக சிறப்பாக செயல்பட்டது என்று கூறியுள்ளார்

Mumbai Indians

நிச்சயமாக இந்த ஆண்டு அந்த அணி தொடரை கைப்பற்ற அதிக வாய்ப்பு உள்ளது

மீதமுள்ள ஐபிஎல் போட்டிகள் வருகிற செப்டம்பர் 10-ஆம் தேதி தொடங்கப்படும் என்று தற்போழுது பிசிசிஐ கூறியிருக்கிறது. அதன்படி மீதமுள்ள ஐபிஎல் போட்டியில் நிச்சயமாக மும்பை அணி சிறப்பாக செயல்படும் என்றுதான் நினைக்கிறேன் என்று மைக்கில் வாகன் கூறியிருக்கிறார். ஏனென்றால் சென்ற ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் மும்பை அணி மிக சிறப்பாக செயல்பட்டது.

Rohit Sharma

தற்பொழுது மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளும் அங்கேயே நடக்க இருப்பதால் மும்பை அணிக்கு அது சற்று பலமாக அமையும். அதுமட்டுமின்றி மும்பை அணி எப்பொழுதும் ஒரு சாம்பியன் அணி. அந்த அணியின் தலைவர் ரோகித் சர்மா எப்பொழுது எந்த மாதிரியான வியூகத்தை வகுக்க வேண்டும் என்று நன்கு அறிந்து வைத்திருப்பார். எனவே அவரது தலைமையின் கீழ் இந்த ஆண்டும் மும்மை அணி தொடரை கைப்பற்ற அதிக வாய்ப்புள்ளது என்று உறுதியாகக் மைக்கேல் வாகன் கூறியுள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *