அய்யோ இவரைப் பார்த்தா மட்டும் எனக்கு ரொம்ப பயம் : சேவக்!

இந்திய அணியின் முன்னாள் அதிரடி வீரர் விரேந்தர் சேவாக் எதிரணியின் பந்துவீச்சாளர்கள் கண்களை கலங்கவைத்த வீரர்களில் ஒருவர். பந்துவீச்சாளர்களை பார்த்து பேட்ஸ்மேன்கள் பயந்த போது, பந்துவீச்சாளர்களுக்கு பயத்தை காட்டியவர் தான் விரேந்தர் சேவாக். ஆனால், முன்னாள் இலங்கை அணியின் ஸ்பின் ஜாம்பவான் முத்தையா முரளிதரனை பார்த்தால் மட்டும் தான் எனக்கு பயம் என முன்னாள் இந்திய அணியின் அதிரடி வீரர் விரேந்தர் சேவாக் தெரிவித்தார்.

‘பேட்டிங் செய்யும் போது நான் பயந்த ஒரே ஒரு பவுலர் இலங்கையின் முரளிதரன் தான். ஆனால் அவரது கண்ணைப்பார்த்து தான் பயந்தேன்.’ என முன்னாள் அதிரடி மன்னன் சேவக் தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி மன்னன் சேவக். தற்போது சரவ்தேச கிரிக்கெட்டில் இருந்து முழுமையாக ஓய்வு பெற்ற இவர், டி.வி., வர்ணனையாளராக உள்ளார். தனது காமெடியாக பேச்சால் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியுள்ளார்.
இவர் போட்டிகளில் பங்கேற்ற போது, எந்த ஒரு பவுலருக்கும் பயப்படாமல் பவுண்டரிகளும், சிக்சர்களும் விளாசுவதில் வல்லவர். இந்நிலையில் இவரை பயமுறுத்திய பவுலர் குறித்து தனியார் டி.வி., நிகழ்ச்சியில் சேவக் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சேவக் கூறுகையில்,’ நான் பேட்டிங் செய்யும் போது எந்த பவுலருக்கும் பயந்தது இல்லை என்றாலும், இலங்கையின் முரளிதரன் பவுலிங் செய்யும் முறை என்னை அதிகமாக அச்சுறுத்தியுள்ளது. குறிப்பாக அவரது முகபாவனை பார்த்து பயந்துள்ளேன். அவர் வீசும் தூஸ்ரா பந்தை அவ்வளவு எளிதில் எதிர்கொள்ள முடியாது. அப்போது அவரின் கண்கள் தனியாக வெளியே வரும் அளவுக்கு இருக்கும்.அதுக்கு பயப்படாத பேட்ஸ்மேன்களே இருக்க முடியாது’ என்றார்.

Silambarasan Kv: Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

This website uses cookies.