இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்பது எனது கனவும்; காத்திருக்கும் இளம் வீரர்
இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாட வேண்டும் என்பது தனது கனவு என்று இளம் கிரிக்கெட் வீரரான ரஜ்னேஷ் குர்பானி தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் நடந்து முடிந்து ரஞ்சி டிராபியில் சிறப்பாக செயல்பட்டு விக்கெட்டுகளை அள்ளியதன் மூலம் கிரிக்கெட் வட்டாரத்தில் பிரபலமடைந்தவர் ரஜ்னேஷ் குர்பானி.
25வயதாகும் இவர் நடந்து முடிந்த ரஞ்சி டிராபியில் 39 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் முன்னாள், இன்னாள் கிரிக்கெட் வீரர்கள் என பலரின் பாராட்டையும் பெற்றார். இது தவிர ரஞ்சி தொடரில் சிறப்பாக செயல்பட்டதன் எதிரொலியாக இவரை இந்திய அணியில் எடுப்பதற்கான ஆலோசனைகளும் நடைபெற்று வருவதாக தெரிகிறது.
இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாட வேண்டும் என்பது தனது கனவு என்று ரஜ்னேஷ் குர்பானி தெரிவித்துள்ளார்.
இது குறித்து ரஜ்னேஷ் குர்பானி கூறியாதவது, “இந்திய இளம் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளரான டிராவிட்டிடம் இருந்து நிறைய விசயங்களை கற்றுகொள்ள மிகுந்த ஆவலுடன் காத்துள்ளேன். டிராவிட் என்னை பார்த்தது இல்லை, அதனால் அவர் என்னை பற்றி விரைவில் தெரிந்து கொள்ளும்படி சிறப்பாக விளையாடுவேன். இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாட வேண்டும் என்பது எனது கனவு.
நான் எனது விளையாட்டில் கவனம் செலுத்தி சிறப்பாக செயல்பட்டால் இந்திய அணியின் தேர்வாளர்கள் என்னை இந்திய அணியில் எடுப்பது பற்றி ஆலோசிப்பார்கள், நான் சிறப்பாக விளையாடினால் மட்டுமே அவர்களது கவனத்திற்காவது நான் செல்ல முடியும். அதனால் எனது விளையாட்டில் முழு கவனம் செலுத்தி வருகிறேன். இந்திய அணியில் இடம்பெறுவதற்கான அனைத்து முயற்சிகளிலும் ஈடுபடுவேன்” என்று தெரிவித்துள்ளார்.