பாகிஸ்தான் பத்தி தெரியாது… ஆனா எங்ககிட்ட இந்திய அணியின் படம் கண்டிப்பா ஓடாது; வேகப்பந்து வீச்சாளர் பகிரங்க எச்சரிக்கை
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணியே வெற்றி பெறும் என இங்கிலாந்து அணியின் கிரிஸ் வோக்ஸ் தெரிவித்துள்ளார்.
சர்வதேச ஒருநாள் போட்டிகளுக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த சில தினங்களுக்கு முன்பு துவங்கியது.
இந்தியாவின் பல்வேறு முக்கிய நகரங்களில் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் தனது முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணியையும், இரண்டாவது போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணியையும் வீழ்த்தி வெற்றி வாகை சூடிய இந்திய அணி, தனது அடுத்தடுத்த போட்டிகளில் நியூசிலாந்து, இங்கிலாந்து போன்ற அணிகளை எதிர்கொள்ள உள்ளது.
நடப்பு உலகக்கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் அதிக வாய்ப்புள்ள அணிகளில் இந்திய அணியே முதன்மையான அணியாக பார்க்கப்படும் நிலையில், இந்திய அணிக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணியே வெற்றி பெறும் என இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரரான கிரிஸ் வோக்ஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கிரிஸ் வோக்ஸ் பேசுகையில், “இந்திய அணியை அதன் சொந்த மண்ணில் வைத்து வீழ்த்துவது சாதரண விசயம் கிடையாது என்பதை யாருமே மறுக்க முடியாது. இந்திய அணி வலுவானது, இந்திய அணியை அதன் சொந்த மண்ணில் வைத்து வீழ்த்துவது அதிக சவாலானது தான் என்றாலும், எங்கள் அணியிலும் திறமையான பல வீரர்கள் உள்ளனர். இந்திய அணியை வீழ்த்தும் அளவிற்கு இங்கிலாந்து அணியும் வலுவான அணியாகவே உள்ளது. இந்திய அணிக்கு எதிரான போட்டி நிச்சயம் அதிக சவால் நிறைந்த போட்டியாகவே இருக்கும், ஆனால் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் வெற்றிக்காக இங்கிலாந்து அணி கடுமையாக போராடும்” என்று தெரிவித்தார்.