இன்னொரு தோனி உங்களுக்கு கிடைக்கவே மாட்டான் ; ஆதரவாக பேசும் முன்னாள் வீரர் !! 1

இன்னொரு தோனி உங்களுக்கு கிடைக்கவே மாட்டான் ; ஆதரவாக பேசும் முன்னாள் வீரர்

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன். ஓய்வுக்கு பின் கிரிக்கெட் உலகின் வர்ணனையாளராக உள்ளார். இந்நிலையில் முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனி இன்னும் இந்திய அணிக்காக விளையாடுவார் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கடந்த 2019 இல் இங்கிலாந்தில் நடந்த 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு பின் தற்போது வரை இந்திய அணியில் தோனி இடம் கிடைக்காமல் தவித்து வருகிறார். இதையடுத்து முன்னாள் கேப்டன்களான கவாஸ்கர், கபில் தேவ் உள்ளிட்டோர் தோனி இனி இந்திய கிரிக்கெட் அணிக்கு திரும்புவது என கருத்து தெரிவித்தனர். ஆனால் முன்னாள் இங்கிலாந்து கேப்டன் நாசர் ஹுசைன் தோனி மீண்டு வருவார் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இன்னொரு தோனி உங்களுக்கு கிடைக்கவே மாட்டான் ; ஆதரவாக பேசும் முன்னாள் வீரர் !! 2

இதுகுறித்து நாசர் ஹுசைன் கூறுகையில், “ஒருமுறை தோனி ஓய்வுக்குள் சென்றுவிட்டால் மீண்டும் வரப்போவது கிடையாது. விளையாட்டில் சில ஜாம்பவான்கள் உள்ளனர் ஏன் என்றால் அவர்கள் தலைமுறைக்கான வீரர்கள். அதில் ஒருவர் தான் தோனி, அதனால் அவரை விரைவாக ஓய்வுக்குள் தள்ள வேண்டாம். தோனியின் மனநிலை அவர் ஒருவருக்கு மட்டுமே தெரியும்.

இன்னொரு தோனி உங்களுக்கு கிடைக்கவே மாட்டான் ; ஆதரவாக பேசும் முன்னாள் வீரர் !! 3

இறுதியில் தேர்வுக்குழுவினர் அணியை தேர்வு செய்வார்கள். இன்னும் இந்திய அணிக்காக விளையாட தோனி முடியும் என்றால் அதில் தவறு இல்லை. நான் தோனியிடம் இன்னும் இந்திய அணிக்காக கிரிக்கெட் விளையாடும் தகுதி உள்ளதை பார்க்கிறேன். உலகக்கோப்பை உள்ளிட்ட சில போட்டிகளின் ரன் ஷேசிங்கில் தோனி கோட்டைவிட்டிருக்கலாம். பொதுவாக தோனி ஒரு திறமையான வீரர்” என்றார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *