எழுதி வச்சுக்கங்க... இது நடந்தா விராட் கோலிக்கு தான் ஆரஞ்சு நிற தொப்பி; ரவி சாஸ்திரி உறுதி !! 1

இந்த வருடத்திற்கான ஐபிஎல் தொடரில் விராட் கோலி துவக்க வீரராக களமிறங்கினால், அதிக ரன்கள் குவித்த வீரர்களில் அவரே முதலிடத்தில் இருப்பார் என இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளரான ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

கடந்த 2008ம் ஆண்டில் இருந்து ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வரும் உள்ளூர் டி.20 தொடரான ஐபிஎல் தொடரின் 15வது சீசன் 26ம் தேதி துவங்கியது. கொரோனா விதிமுறைகள் காரணமாக இந்த தொடரின் அனைத்து போட்டிகளிலும் மும்பையில் வைத்து நடத்தப்பட உள்ளது.

எழுதி வச்சுக்கங்க... இது நடந்தா விராட் கோலிக்கு தான் ஆரஞ்சு நிற தொப்பி; ரவி சாஸ்திரி உறுதி !! 2

மொத்தம் 70 போட்டிகள் கொண்ட இந்த தொடரின் முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, சென்னை அணியை வீழ்த்தி வெற்றி வாகை சூடியது. இந்த தொடரில் இன்று இரவு நடைபெறும் போட்டியில் பெங்களூர் அணி பஞ்சாப் அணியை எதிர்கொள்ள உள்ளது.

தோனியை போன்றே விராட் கோலியும் இந்த முறை கேப்டன் பதவியை துறந்துவிட்டு சாதரண வீரராக விளையாட உள்ளதால், இந்த தொடரில் விராட் கோலியின் ஆட்டத்தை பார்க்க ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்துள்ளனர். அதே போல் கடந்த தொடர்களில் துவக்க வீரராக களமிறங்கிய விராட் கோலி, இந்த முறை எந்த இடத்தில் களமிறங்குவார் என்ற விவாதமும் ஒரு புறம் நடைபெற்று வருகிறது.

எழுதி வச்சுக்கங்க... இது நடந்தா விராட் கோலிக்கு தான் ஆரஞ்சு நிற தொப்பி; ரவி சாஸ்திரி உறுதி !! 3

இந்தநிலையில், விராட் கோலி குறித்து பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளரான ரவி சாஸ்திரி, விராட் கோலி இந்த முறையும் துவக்க வீரராக களமிறங்கினால் அது பெங்களூர் அணிக்கு மிகப்பெரும் பலத்தை கொடுக்கும் என தெரிவித்துள்ளார்.

எழுதி வச்சுக்கங்க... இது நடந்தா விராட் கோலிக்கு தான் ஆரஞ்சு நிற தொப்பி; ரவி சாஸ்திரி உறுதி !! 4

இது குறித்து ரவி சாஸ்திரி பேசுகையில்,“விராட் கோலி இந்த தொடரில் துவக்க வீரராக களமிறங்கினால், ஆரஞ்சு நிற தொப்பி அவரிடம் மட்டுமே இருக்கும் என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை. கோலி துவக்க வீரராக களமிறங்குவது பெங்களூர் அணியின் பேட்டிங் ஆர்டருக்கும் வலு சேர்க்கும். விராட் கோலி மூன்றாவது இடத்தில் களமிறங்கினாலும் பிரச்சனை இல்லை, அணியின் தேவைக்கு ஏற்ப களமிறங்குவதே சரியானதாக இருக்கும். இந்த முறை பெங்களூர் அணியின் பேட்டிங் ஆர்டர் வலுவனாதாக உள்ளது. புதிய கேப்டன் டூபிளசிஸ் எப்படி செயல்படுகிறார் என்பதை பார்க்க காத்துள்ளேன்” என்று தெரிவித்தார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *