பார்ம் அவுட்டில் இருந்தாலும் வெளிநாட்டு தொடர்களில் ரகானே தான் இந்திய அணியின் தூண் : பயிற்சியாளர் 1

தொடர்ந்து அடுத்தது சொதப்பி வரும் ரகானே அடுத்து வரும் தொடர்களில் களம் இறைக்கப்படுவாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இகங்கை அணிக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டியில் சோதப்பிய அவர், மூன்றாவது டெஸ்ட் போட்டியிலும் முதல் மற்றும், இரண்டாவது இன்னிங்ஸிலும் இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டன் ரஹானே ஏமாற்றினார்.பார்ம் அவுட்டில் இருந்தாலும் வெளிநாட்டு தொடர்களில் ரகானே தான் இந்திய அணியின் தூண் : பயிற்சியாளர் 2

இலங்கை கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடிவருகிறது. மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி டெல்லியில் நடந்தது. இந்த தொடரில் ரஹானே தொடர்ந்து, 4, 0, 2, 1 என்ற ரன்களே எடுத்துள்ளார். கடைசி டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 1 ரன் எடுத்த அவர், இரண்டாவது இன்னிங்ஸில் நிலைத்து நின்று ஆடுவார் என்று எதிர்பார்த்தனர். ஆனால், பத்து ரன்களில் வெளியேறி ஏமாற்றினார். இதையடுத்து அவரது பார்ம் கேள்விக்குறியாகியது

இலங்கைக்கு எதிரான தொடரில் அவர் சிறப்பாக ஆட வில்லை என்றாலும் வெளிநாடுகளில் அவரது ஸ்டிரைக் ரேட் அபாரமாக இருப்பதால் தென்னாப்பிரிக்க தொடருக்கு அவர் சேர்க்கப்பட்டுள்ளார் என்று இந்திய தேர்வுக் குழு ஏற்கனவே தெரிவித்திருந்தது.பார்ம் அவுட்டில் இருந்தாலும் வெளிநாட்டு தொடர்களில் ரகானே தான் இந்திய அணியின் தூண் : பயிற்சியாளர் 3

மேலும், தற்போது ஒருநாள் அணியில் இருந்தாலும் அவர் கடந்த மூன்று ஒருநாள் தொடர்களிலும் பென்ச்சில் தான் உட்கார வைக்கப்பட்டுள்ளார். ஆனால், கடந்த ஆஸ்திரேலியா ஒருநாள் தொடரில் தொடர்ந்து 4 அரை சதம் அடித்திருந்தார் ரகானே. இருந்தும், அந்த பார்மை அப்படியே டெஸ்ட் போட்டிகளில் கொண்டு செல்ல முடியவில்லை.

இது குறித்து இந்திய அணியின் துணை பயிச்சியாளர் சஞ்சய் பங்கர் பேசினார், மேலும் தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து உள்ளிட்ட வெளிநாட்டு தொடர்களில் அணியில் ரகானேவின் ரகானேவின் முக்கியத்துவம் பற்றிக் கூறினார் சஞ்சய்.Cricket, India, West Indies, BCCI, Sanjay Bangar

வெளிநாட்டு ஆடுகலங்களில் அவரது செயல்பாடு மிக அற்புதமாக இருக்கிறது. அனைத்து வெளிநாட்டு தொடர்களிலும் ரன் குவித்த மிக சொற்பமான இந்தியா வீரர்களில் இவரும் ஒருவர். இதுவே அவரது தரத்தை காட்டுகிறது. கடந்த சில வருடங்களில் ஒவ்வொரு முறை இந்திய அணியின் விக்கெட்டுகள் சரியும் போதும் அவர் வந்த காப்பாற்றி இருக்கிறார். தொடர்ந்து இவ்வளவு நாட்கள் ரன் அடிக்க முடியாமல் இருக்கும் ஒரு வீரர் அல்ல அவர். வெளிநாட்டு ஆடுகளங்களில் இந்திய அணிக்கு ஓர் முக்கியமான வீரர் ஆவார்.பார்ம் அவுட்டில் இருந்தாலும் வெளிநாட்டு தொடர்களில் ரகானே தான் இந்திய அணியின் தூண் : பயிற்சியாளர் 4

என அவரது முக்கியத்துவத்தைப் பற்றி பேசினார் சஞ்சய் பங்கர்.

ரகானேவின் டெஸ்ட் புள்ளி விவரங்கள் :

இந்திய அணியில் மொத்தம் 19 டெஸ்ட் போட்டிகளில் ஆடி, 36.88 சராசரியில் 1009 ரன் குவித்துள்ளார் ரகானே. அதே நேரத்தில், வெளிநாட்டு ஆடுகளங்களில் 24 டெஸ்ட் போட்டிகளில் 53.44 சராசரியில் 1817 ரன் குவித்துள்ளார் ரகானே. இதனால் தான் அவர் வெளிநாட்டு ஆடுகளங்களில் இந்திய அணியின் முக்கிய வீரராக பார்க்கப்படுகிறார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *