திறமை இல்லைனா கிளம்புங்க... நீங்க கிரிக்கெட் விளையாடவே தகுதி இல்ல; முன்னாள் பாகிஸ்தான் வீரர் கடும் காட்டம் !! 1

ஆடுகத்தை குறை கூறும் பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர்கள் கிரிக்கெட் விளையாட்டில் இருந்து தாங்களாக ஒதுங்கி கொள்ள வேண்டும் என முன்னாள் பாகிஸ்தான் வீரரான சயீத் அஜ்மல் தெரிவித்துள்ளார்.

பல வருடங்களுக்கு பிறகு பாகிஸ்தானிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, பாகிஸ்தான் அணியுடன் மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது.

இந்த தொடரின் முதல் இரண்டு போட்டியிலுமே யாருக்கும் வெற்றி கிடைக்கவில்லை, இரண்டு போட்டியுமே டிராவில் முடிந்தன. இரண்டு போட்டி நடைபெற்ற ஆடுகளமுமே பந்துவீச்சிற்கு சற்றும் ஒத்துழைக்கவில்லை, பேட்டிங்கிற்கே சாதகமாக இருந்தது.

திறமை இல்லைனா கிளம்புங்க... நீங்க கிரிக்கெட் விளையாடவே தகுதி இல்ல; முன்னாள் பாகிஸ்தான் வீரர் கடும் காட்டம் !! 2

ஆடுகளத்தை இவ்வளவு மோசமாக வடிவமைப்பது சரியானது அல்ல என ஆஸ்திரேலிய வீரர்களுடன் சேர்ந்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர்கள் பலரும் பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகத்தை கடுமையாக சாடியிருந்தனர்.

இந்தநிலையில், ஆடுகளத்தை விமர்சிப்பவர்கள் கிரிக்கெட் விளையாட்டை விட்டே தாங்களாக ஒதுங்கி கொள்ள வேண்டும் என பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான சயீத் அஜ்மல் தெரிவித்துள்ளார்.

திறமை இல்லைனா கிளம்புங்க... நீங்க கிரிக்கெட் விளையாடவே தகுதி இல்ல; முன்னாள் பாகிஸ்தான் வீரர் கடும் காட்டம் !! 3

இது குறித்து சயீத் அஜ்மல் பேசுகையில், “ விக்கெட் எடுக்க பொறுமை மிக முக்கியம். தொடர்ச்சியாக 8-10 ஓவர்கள் வீசி பேட்ஸ்மேன்களுடன் மைண்ட் கேம் ஆடவேண்டும். அதன்பின்னர் தான் திட்டங்கள், வியூகங்களை செயல்படுத்த வேண்டும். ஃப்ளாட்டான பிட்ச் என்று விமர்சிக்கும் வீரர்கள் கிரிக்கெட்டே ஆடாதீர்கள். எப்படிப்பட்ட பிட்ச் என்று பார்த்துவிட்டுத்தான் பந்துவீசுவீர்கள் என்றால், அப்புறம் என்ன ஸ்பின்னர்? அனைத்துவிதமான கண்டிஷன்களிலும் சிறப்பாக பந்துவீச ஸ்பின்னர் கற்றுக்கொள்ள வேண்டும் என்று” என்று தெரிவித்துள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *