457 கோடி வேனுமாம், கும்பல் குருக்களுக்கு!! 1

இந்திய அணி தன் நாட்டு அணியுடன் கிரிக்கெட் விளையாடததற்கு ₹.457 கோடி இழப்பீடு வேண்டும் எனகேட்டு அழுகை செய்துள்ளது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்க்கு இதுவே முழு நேர வேலையாகிவிட்டது. இந்தியாவுடன் போட்டி நடத்த கெஞ்ச வேண்டியது, பின்னர் முடியாது என்று அறிவித்தவுடன் அழுது புலம்பி சர்வதேச கிரிக்கெட் வாரியத்தில் முறையிட வேண்டியது.

457 கோடி வேனுமாம், கும்பல் குருக்களுக்கு!! 2

008ம் ஆண்டு நடைபெற்ற மும்பை தீவிரவாத தாக்குதலுக்கு பின், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியுடன், முழுமையான இரு தரப்பு தொடரில் விளையாட இந்தியா மறுப்பு தெரிவித்து வருகிறது.

இருந்தபோதும் இரு தரப்பு தொடர்களில் விளையாடுவது என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) இடையே, 2014ம் ஆண்டு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது.

அதன்பின் காஷ்மீர் எல்லையில் நடைபெற்ற தொடர்ச்சியான தீவிரவாத தாக்குதல்கள் காரணமாக, பாகிஸ்தானுடன் விளையாடுவதை இந்தியா விரும்பவில்லை. இதனால் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி), ஆசிய கிரிக்கெட் கவுன்சில் (ஏசிசி) நடத்தும் போட்டிகளில் மட்டுமே இந்தியா-பாகிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன.

457 கோடி வேனுமாம், கும்பல் குருக்களுக்கு!! 3

முன்னதாக புரிந்துணர்வு ஒப்பந்தத்தை பிசிசிஐ மதிக்கவில்லை எனக்கூறி, தங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என பிசிபி வலியுறுத்தி வருகிறது.

பாகிஸ்தானின் லாகூர் நகருக்கு வந்திருந்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) தலைமை செயல் அதிகாரி டேவ் ரிச்சர்ட்சன் இது தொடர்பாக நிருபர்களிடம் கூறுகையில்,

’இந்தியாவும், பாகிஸ்தானும் இரு தரப்பு தொடரில் விளையாடுவதை பார்க்க வேண்டும் என்பதையே நாங்களும் விரும்புகிறோம்.

ஆனால் பாகிஸ்தானுடன் விளையாடும்படி, எங்களால் இந்தியாவை கட்டாயப்படுத்த முடியாது. இரு தரப்பு கிரிக்கெட் தொடர் என்பது, இரு நாட்டு வாரியங்களுக்கு இடையே செய்து கொள்ளப்படும் ஒப்பந்தத்தின் அடிப்படையில்தான் நடைபெறும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். 

457 கோடி வேனுமாம், கும்பல் குருக்களுக்கு!! 4
Chief executive officer of International Cricket Council (ICC) David Richardson speaks during a news conference at the end of its annual conference in Kuala Lumpur June 28, 2012. REUTERS/Bazuki Muhammad (MALAYSIA – Tags: SPORT CRICKET HEADSHOT)

பொதுவான இடங்களில் விளையாடலாம், இழப்பீடு வழங்க வேண்டும் என பிசிபி கூறி வருவதை பற்றி நாங்கள் அறிந்து வைத்துள்ளோம். இந்த விவகாரத்தில் நாங்கள் நடுநிலையுடன்தான் செயல்பட்டு வருகிறோம்’ என்றார்.

2015-2023ம் ஆண்டு வரை, 6 இரு தரப்பு தொடர்களில் விளையாடுவது என, பிசிசிஐ மற்றும் பிசிபி இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம், கடந்த 2014ம் ஆண்டு செய்து கொள்ளப்பட்டது.

இதன்படி மொத்தம் 14 டெஸ்ட், 30 ஒரு நாள், 12 டி20 போட்டிகளில் இந்தியாவும், பாகிஸ்தானும் விளையாட இருந்தன. இதில், 4 தொடர்களை பாகிஸ்தானில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.

457 கோடி வேனுமாம், கும்பல் குருக்களுக்கு!! 5

இந்தியா–பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியங்கள் இடையே செய்யப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் படி இரு நாடுகள் இடையிலான கிரிக்கெட் போட்டி தொடரில் விளையாட இந்திய அணி மறுத்து வருவதால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு பெரும் நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஒப்பந்ததின்படி தங்களுடன் இரண்டு உள்நாட்டு தொடர்களில் விளையாட மறுத்த இந்திய கிரிக்கெட் வாரியம் ரூ.457 கோடியை இழப்பீட்டாக தர வேண்டும், இது பற்றி ஐ.சி.சி.யிடம் முறையிடுவோம் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது.

இதுகுறித்து பேசிய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் நஜம் சேத்தி பேசுகையில்,

‘பொதுவான இடத்தில் போட்டியை நடத்தலாம் என்று கூறினோம். இலங்கையில் வைத்து கூட போட்டியை நடத்த முன்வந்தோம். எதற்கும் இந்திய கிரிக்கெட் வாரியம் செவிசாய்க்கவில்லை’

என கூறினார்.

2012–ம் ஆண்டுக்கு பிறகு இந்திய அணி, பாகிஸ்தானுடன் நேரடி போட்டி தொடரில் விளையாடியது கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *