இவரை போன்ற சிறந்த மனிதரை பார்த்ததே இல்லை – இந்திய முன்னாள் கேப்டனை புகழ்ந்த பாக்., வீரர்!
இவர் சிறந்த வீரர் மட்டுமல்ல, நல்ல மனிதரும் கூட என இந்திய அணியின் முன்னாள் கேப்டனை புகழ்ந்துள்ளார் பாக்., வீரர்.
கங்குலி இந்திய கிரிக்கெட்டின் கேப்டனாக இருந்த காலகட்டத்தில் பாகிஸ்தான் அணியின் முன்னணி சுழல்பந்து வீச்சாளராக இருந்தவர் சக்லைன் முஷ்டாக். இந்தியா-பாக்., போட்டிகளின் நடுவே சக்லைன் முஷ்டாக் – கங்குலி இருவருக்கும் இடையே பலமுறை மைதானத்தில் வாக்குவாதங்கள் நிகழ்ந்திருக்கிறது.

அதில் மைதானத்திற்கு வெளியே நேர்ந்த சில சுவாரஷ்யமான தகவல்களை பகிர்ந்துள்ளார் சக்லைன்.
குறிப்பாக, “ஒரு முறை இந்தியா அணி இங்கிலாந்துக்கு பயணம் மேற்கொண்டிருந்தபோது, நான் சஸ்செக்ஸ் கவுண்டி அணிக்காக விளையாடி வந்தேன். காலில் ஏற்பட்ட காயம் காரணமாக நீண்ட நாட்கள் விளையாடாமல் ஓய்வில் இருந்து வந்தேன்.

நீண்ட இடைவெளிக்கு பிறகு, இந்திய அணிக்கு எதிரான 3 நாள் போட்டிகளில் நான் விளையாட வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அப்போது சவுரவ் கங்குலி விளையாடவில்லை. வெளியில் அமர்ந்திருந்தார்.
அச்சமயம் நான் இருக்கும் காத்திருப்பு அறைக்கு கையில் காபியுடன் வந்த கங்குலி, என்னிடம் காபியை கொடுத்துவிட்டு என் உடல்நலம் குறித்தும், குடும்பம் குறித்தும் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தார்.
போட்டியின்போது சச்சரவுகள் இருந்தாலும், மைதானத்தை தாண்டியவுடன் அதை மறந்துவிட்டு இயல்பாக இருப்பவர் கங்குலி. இதுபோன்ற கேப்டன் இந்திய அணிக்கு கிடைத்த பாக்யம் என நினைக்கிறன்” என்றார்.

அப்போது தான் புரிந்துகொண்டேன், “இவர் சிறந்த வீரர் மட்டுமல்ல; சிறந்த மனிதரும் கூட” என்றார்.