உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகள் வருகிற ஜூன் 18-ஆம் தேதி இறுதி போட்டியில் இங்கிலாந்தில் விளையாட இருக்கிறது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணி இங்கிலாந்து தென் ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியா போன்ற அணிகளை வீழ்த்தி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் முதல் இரண்டு இடங்களில் நீடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. மறுபக்கம் நியூசிலாந்து அணி இந்தியா பாகிஸ்தான் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் பங்களாதேஷ் போன்ற அணிகளை வீழ்த்தி முதல் இரண்டு இடங்களில் நீடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.
தற்பொழுது டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் மிக சிறப்பாக விளையாடிய சிறந்த பதினோரு டெஸ்ட் வீரர்கள் கொண்ட அணியை பேட் கம்மின்ஸ் தேர்வு செய்துள்ளார்.

ஓபனிங் வீரர்களாக டேவிட் வார்னர் மற்றும் ரோகித் சர்மா
பேட் கம்மின்ஸ் ஓபனிங் வீரர்களாக டேவிட் வார்னர் மற்றும் ரோகித் சர்மா ஆகிய இருவரை தேர்வு செய்துள்ளார். இதற்கு காரணம் கொடுத்த அவர் இவர்கள் இருவரும் சிறிதும் பயமின்றி நிதானமாக விளையாடுபவர்கள். இவர்கள் இருவரும் அந்த அணிக்காக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் மிக சிறப்பாக விளையாடியதன் காரணமாக இவர்கள் இருவரை தேர்வு செய்துள்ளதாக கூறியுள்ளார்.
மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களாக கேன் வில்லியம்சன் விராட் கோலி மற்றும் ஸ்டீவ் ஸ்மித்
மூன்று நான்கு மற்றும் ஐந்து இடங்களில் தலைசிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் ஆன கேன் வில்லியம்சன் விராட் கோலி மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோரை தேர்ந்தெடுத்து உள்ளார். இவர்கள் மூவரும் எந்த மாதிரியான போட்டியிலும் ஆட்டத்தின் தரத்தை அறிந்து அணியின் தேவைக்கு ஏற்ப மிக சிறப்பாக விளையாட கூடியவர்கள். எனவே இவர்களை மிடில் ஆர்டரில் தேர்ந்தெடுத்து உள்ளதாக கூறியுள்ளார்.

பென் ஸ்டோக்ஸ் மற்றும் ரிஷப் பண்ட்
ஃபினிஷிங் வீரர்களாக பென் ஸ்டோக்ஸ் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோரை தேர்ந்தெடுத்து உள்ள பேட் கம்மின்ஸ், இவர்கள் இருவரும் மற்ற வீரர்களை போல் இல்லாமல் அணியை வெற்றிபெறச் செய்ய கடைசி வரை தங்களது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தும் திறமை படைத்தவர்கள். இங்கிலாந்துகாக பென் ஸ்டோக்ஸ் மற்றும் இந்திய அணிக்காக ரிஷப் பண்ட் இருவரும் பல போட்டிகளில் தங்கள் அணியை வெற்றி பெறச் செய்துள்ளனர். எனவே மேட்ச் விண்ணர்கள் என்கிற அடிப்படையில் இவர்கள் இருவரையும் தேர்ந்தெடுத்து உள்ளதாக கூறியுள்ளார்.

பவுலர்களாக பேட் கம்மின்ஸ் நாதன் லியோன், ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ககிசோ ரபடா
இறுதியில் பந்துவீச்சாளர்களை பொறுத்தவரையில் வேகப்பந்து வீச்சாளர்களாக ஜஸ்பிரித் பும்ரா பேட் கம்மின்ஸ் மற்றும் ரபாடா ஆகியோரைக் குறிப்பிட்டுள்ளார். மூன்று வகை கிரிக்கெட்டிலும் இவர்கள் மூவரும் சிறப்பாக பந்துவீசி பல நேரங்களில் பல திருப்புமுனையை ஏற்படுத்தக் கூடியவர்கள். எனவே வேகப்பந்து வீச்சாளர்களை பொறுத்தவரையில் இவர்களும் சுழற்பந்து வீச ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த நாதன் லியோனை பேட் கம்மின்ஸ் தேர்ந்தெடுத்துள்ளார்.
பேட் கம்மின்ஸ் தேர்ந்தெடுத்துள்ள அந்த 11 வீரர்கள்
ரோகித் சர்மா, டேவிட் வார்னர், விராட் கோலி, ஸ்டீவ் ஸ்மித், கேன் வில்லியம்சன், பென் ஸ்டோக்ஸ், ரிஷப் பண்ட், பேட் கம்மின்ஸ், ஜஸ்பிரித் பும்ரா, ரபாடா மற்றும் நாதன் லியோன்