நான் அப்படி சொல்லல.. தப்பா எடுத்துக்காதீங்க - அந்தர் பல்டி அடித்த முன்னாள் பாக்., வீரர்! 1

நான் அப்படி சொல்லல.. தப்பா எடுத்துக்காதீங்க – அந்தர் பல்டி அடித்த முன்னாள் பாக்., வீரர்!

நான் கனேரியா பற்றி சொன்ன கருத்தை மற்றவர்கள் தவறாக புரிந்துகொண்டார்கள் என தெரிவித்துள்ளார் பாக்., அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் சோயிப் அக்தர்.

பாக்., அணியில் ஆடிய முன்னாள் சுழல்பந்துவீச்சாளர் டேனிஸ் கனேரியா ஹிந்து மதத்தைச் சோ்ந்தவா் என அனைவரும் அறிந்த ஒன்றே. இதனை காரணமாகக்கொண்டு, அணியில் உள்ள வீரர்கள் அப்போது புறக்கணித்தனா் என பாக்., அணியின் முன்னாள் வீரர் ஷோயப் அக்தா் கருத்தினை சில தினங்களுக்கு முன்பு வெளியிட்டார்.

நான் அப்படி சொல்லல.. தப்பா எடுத்துக்காதீங்க - அந்தர் பல்டி அடித்த முன்னாள் பாக்., வீரர்! 2

மேலும், ஹிந்து என்பதால் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரா்கள் கனேரியாவுடன் ஒன்றாக அமா்ந்து சாப்பிட கூட மாட்டாா்கள் என்றும் அக்தா் கூறியிருந்தார். அக்தர் கூறிய இந்த கருத்து பாகிஸ்தான் மட்டுமல்லாது, இந்தியாவிலும் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது குறித்து பேசிய இந்திய அணியின் முன்னாள் வீரர் கம்பீர், பாகிஸ்தானின் உண்மை முகம் வெளிப்பட்டுவிட்டதாக விமா்சித்திருந்தாா். உண்மையை கூறியதற்கு நன்றி என்று கனேரியாவும் தெரிவித்திருந்தாா்.

நான் அப்படி சொல்லல.. தப்பா எடுத்துக்காதீங்க - அந்தர் பல்டி அடித்த முன்னாள் பாக்., வீரர்! 3

பெரும் சர்ச்சை எழுந்தபிறகு, தனது கருத்திற்கு விளக்கமளித்துள்ளார் அக்தர். அவா் வெளியிட்ட பதிவில் தெரிவித்ததாவது,

“எனது அறிக்கையால் ஏற்பட்ட குழப்பத்தை அறிந்தேன். எனது கருத்து தவறாக புரிந்துகொள்ளப்பட்டுவிட்டது. ஒட்டுமொத்த அணியையும் நான் குறை சொல்லவில்லை. ஒரு சில வீரா்கள் மட்டுமே கனேரியாவிடம் பாகுபாடு காட்டினா்.

பாகிஸ்தான் அணியில் மட்டுமல்ல; உலகின் பல்வேறு நாடுகளிலும் ஒரு சில விளையாட்டு வீரா்கள் இன ரீதியிலான கருத்துகளை தெரிவிப்பதுண்டு. பாகிஸ்தானில் மத ரீதியிலான பாகுபாடு காட்டப்படுவதில்லை. மேட்ச் ஃபிக்ஸிங்கில் ஈடுபட்டதால்தான் கனேரியாவுக்கு விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது என்றாா் அக்தா்.

நான் அப்படி சொல்லல.. தப்பா எடுத்துக்காதீங்க - அந்தர் பல்டி அடித்த முன்னாள் பாக்., வீரர்! 4

கனேரியா தனக்கு எதிரான மேட்ச் ஃபிக்ஸிங் குற்றச்சாட்டை கடந்த 2018-ஆம் ஆண்டில் ஒப்புக் கொண்டாா். அதைத் தொடா்ந்து அவருக்கு கிரிக்கெட் விளையாட வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது.” என்றார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *