ஸ்டைலான தோற்றத்தால் விராட் கோலி, யுவராஜ் சிங் ஆகியோர் உலகம் முழுவதும் பெண் ரசிகர்கள் வைத்துள்ளனர். ஆனால், பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா, சச்சின் டெண்டுல்கருடன் வெளிய செல்ல ஆசையாக இருக்கிறது என கூறினார். அவர் கூறிய காரணத்தை கேட்டால் அவர் மேல் உங்களுக்கு மதிப்பும் வரும்.
இதை இந்தியன் பிரீமியர் லீக் தொடர் முடிந்தவுடன் முன்னாள் உலக அழகி பிரியங்கா சோப்ரா கூறினார். விராட் கோலி மற்றும் யுவராஜ் சிங் ஆகியோர் அழகான தோற்றம் கொண்ட வீரர்கள் தான், ஆனால் எனக்கு சச்சின் டெண்டுல்கருடன் வெளியே செல்ல தான் ஆசையாக இருக்கிறது என கூறினார்.
“சச்சின் டெண்டுல்கர் – அவர் மிகவும் சாதித்திருக்கிறார். அவர் எப்படி நீண்ட காலமாக விளையாட்டின் உச்சியில் இருந்தார் என்பதை புரிந்து கொள்ள விரும்புகிறேன்,” என பிரியங்கா சோப்ரா கூறினார்.
எல்லா காலத்திலும் சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக, சச்சின் டெண்டுல்கர் கிட்டத்தட்ட 25 ஆண்டுகளாக விளையாடியுள்ளார், அதுமட்டும் இல்லாமல் கிரிக்கெட்டில் பல சாதனைகளுக்கு சொந்தக்காரனாகி ஓய்வு பெற்றார்.
“விராட் கோலி, யுவராஜ் சிங் மற்றும் கெவின் பீட்டர்சன் போன்ற பல ஸ்டைலான வீரர்களும் உள்ளனர்,” என சோப்ரா ஒப்புக்கொண்டார்.