ராசி இல்லாத வீரர் என்ற மோசமான சாதனை படைத்தார் ராஜஸ்தான் கேப்டன் ரஹானே !! 1
ராசி இல்லாத வீரர் என்ற மோசமான சாதனை படைத்தார் ராஜஸ்தான் கேப்டன் ரஹானே

அணியின் துவக்க வீரராக களமிறங்கி அரைசதம் அடித்தும் அணியை வெற்றி பெற வைக்க முடியாத முதல் வீரர் என்ற மோசமான சாதனையை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ரஹானே படைத்துள்ளார்.

ஐபிஎல் தொடரின் 28-வது லீக் ஆட்டம் ஜெய்ப்பூரில் நேற்று நடைபெற்றது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் – சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஐதராபாத் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்தது. பின்னர் 152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி களம் இறங்கியது.

ராசி இல்லாத வீரர் என்ற மோசமான சாதனை படைத்தார் ராஜஸ்தான் கேப்டன் ரஹானே !! 2

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் நேர்த்தியான பந்து வீச்சு, பீல்டிங்கால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 140 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. தொடக்க வீரராக களம் இறங்கிய ரகானே 53 பந்தில் 5 பவுண்டரி, 1 சிக்சருடன் 65 ரன்கள் எடுத்தும் அணியை வெற்றி பெற வைக்க முடியவில்லை.

ஐபிஎல் தொடரில் இதற்கு முன்பு ஒரு முறையும் தொடக்க வீரராக களம் இறங்கி 50 ரன்களுக்கு மேல் அடித்து கடைசி வரை அவுட்டாகாமல் நின்ற ரகானேயால் அணியை வெற்றி பெற வைக்க முடியாமல் போன சம்பவம் நடைபெற்றுள்ளது. நேற்றைய ஆட்டம் மூலம் 2-வது முறையாக ரகானேயால் வெற்றி பெற வைக்க முடியாமல் போகியுள்ளது.

ராசி இல்லாத வீரர் என்ற மோசமான சாதனை படைத்தார் ராஜஸ்தான் கேப்டன் ரஹானே !! 3

இதன்மூலம் ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் இரண்டு முறை தொடக்க வீரராக களம் இறங்கி, 50 ரன்களுக்கு மேல் ரன்குவித்து, கடைசி வரை அவுட்டாகாமல் அணியை வெற்றி பெற வைக்க முடியாத ஒரே வீரர் என்ன மோசமான சாதனையை ரகானே படைத்துள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *